இந்தியா

இந்தியாவில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை மண்ணுக்கு அடியில் இருந்து கேட்ட சத்தம்

  • September 20, 2025
  • 0 Comments

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 20 நாட்களான குழந்தை ஒருவரால் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ஆடு மேய்த்து வந்த ஒரு நபர், மண்ணின் அடியில் இருந்து அழுகுரல் கேட்டதையடுத்து குழந்தையை கண்டுபிடித்தார். உடனே பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தற்போது குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை புழுக்களால் கடிக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன எனவும் மண்ணடியில் போதிய ஒக்ஸிஜன் கிடைக்கவில்லை எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் பெண் குழந்தைகளை […]

வாழ்வியல்

ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் அடிகள் நடப்பது கட்டாயமில்லை – நரம்பியல் விஞ்ஞானி விளக்கம்

  • September 20, 2025
  • 0 Comments

ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் அடிகள் நடப்பதால்தான் உடல் எடையை குறைக்க முடியும் என்பதற்கு ஆதாரம் இல்லை என தெரியவந்துள்ளது. அந்த நம்பிக்கைக்கு உறுதியான அறிவியல் ஆதாரம் இல்லையென்று, நியூயார்க் பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானி வெண்டி சுசூகி தெரிவித்துள்ளார். நடைப்பயிற்சி உடலுக்கு நன்மை தருவதில் சந்தேகமில்லை. ஆனால், 10 ஆயிரம் அடி நடப்பது ஒரு விளம்பரத் தந்திரம் மட்டுமே என அவர் கூறினார். அதற்குப் பதிலாக, தினமும் 2,500 முதல் 4,000 அடிகள் நடப்பதாலும் திடீர் மரணம், […]

வட அமெரிக்கா

உலக அமைதியே எனது முக்கிய இலக்கு – டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

  • September 20, 2025
  • 0 Comments

உலக நாடுகள் இடையே அமைதிக்காக தன்னை போன்று பாடுபட்டவர்கள் யாரும் கிடையாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலக அமைதியே தனது இலக்கு எனவும் அவர் வலியுறுத்தினார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். கடந்த 8 மாதங்களில் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, 7 முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.

இலங்கை செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – மகனை அடித்துக் கொலை செய்த தந்தை

  • September 20, 2025
  • 0 Comments

தேவலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்தே பகுதியில் நேற்று தனது மகனை அடித்துக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி மற்றும் மகனைத் தாக்கிய நிலையில் மகனைக் கொன்றதாக தேவலேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மனைவி கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் படுவத்தே, ஹலமட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவராகும். குடும்ப தகராறு காரணமாக, தடியால் அடித்து இந்தக் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் குறித்து நீதவான் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஜெமினி நனோ பனானாவை பயன்படுத்தும் மக்களுக்கு எச்சரிக்கை

  • September 20, 2025
  • 0 Comments

சமீப காலத்தில் செயற்கை நுண்ணறிவு உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறுகிய ஒவ்வொரு காலப்பகுதியிலும் ட்ரெண்ட் எனப்படும் நவீன சொல்லின் பயன்பாட்டை இணையவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி அண்மைய நாட்களில் ஜெமினி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புகைப்படங்களை ஒவ்வொருவருக்கும் ஏற்றாற் போல் மாற்றியமைக்கும் ஒரு வகை ட்ரெண்ட் ஆரம்பித்துள்ளது. இந்த தொழில்நுட்பங்கள் குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் இணையவாசிகளின் ஆர்வம் என்பது குறைந்ததாகத் தெரியவில்லை. நானோ பனானா எனப்படும் ஜெமினியின் புகைப்பட எடிட்டிங் கருவி […]

விளையாட்டு

பாகிஸ்தான் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்குமாறு கோரிக்கை

  • September 20, 2025
  • 0 Comments

ஆசிய கோப்பை 2025 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் செப்டம்பர் 21, 2025 அன்று துபாயில் மோதவுள்ளது. இந்த முக்கியமான சூப்பர் 4 போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கும். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு செப்டம்பர் 19-ல் ஓமன் அணிக்கு எதிரான லீக் போட்டி மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 முதல் […]

இலங்கை

தந்தையின் ஆசையை நிறைவேற்ற மீண்டும் அணியுடன் இணைந்த துனித் வெல்லாலகே

  • September 20, 2025
  • 0 Comments

தந்தையின் மறைவு காரணமாக இலங்கை வந்த கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே, இறுதி மரியாதை செலுத்திய பின்னர், மீண்டும் டுபாய் சென்றுள்ளார். டுபாயில் நடைபெறும் ஆசிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க இன்று அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய்க்கு புறப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பாளர் தெரிவித்தார். அவர் இன்று அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK – 649 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு புறப்பட்டார். “தனது தந்தையின் ஒரே ஆசை, தான் […]

இலங்கை

இலங்கையின் இன்றைய காலநிலை தொடர்பில் வெளியான தகவல்

  • September 20, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி,கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் ஓரளவு பலத்த […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

பெண்கள் புத்தகம் எழுதுவதற்கும் ஆப்கானிஸ்தானில் தடை

  • September 20, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசாங்கம் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் பெண்கள் எழுதிய புத்தகங்களைத் தடை செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி, “ஷரியா எதிர்ப்பு மற்றும் தாலிபான் கொள்கைகள்” என்ற கருப்பொருளுடன் தொடர்புடைய 680 புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றில், “வேதியியல் ஆய்வகத்தில் பாதுகாப்பு” போன்ற தலைப்புகளைக் கொண்ட சுமார் 140 புத்தகங்களும் இந்தத் தடையில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வாரம் மட்டும், தாலிபானின் உச்ச தலைவரின் உத்தரவின் பேரில் சுமார் 10 மாகாணங்களில் பைபர் ஆப்டிக் இணையம் தடை […]

ஐரோப்பா செய்தி

ஏகாதிபத்திய வழிமுறையை திணிக்கும் புட்டின் – பிரித்தானிய உளவுத்துறை தலைவர் அதிர்ச்சி தகவல்

  • September 20, 2025
  • 0 Comments

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புட்டின் விரும்பவில்லை என பிரித்தானிய உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறும் பிரித்தானிய உளவுத்துறை அமைப்பின் தலைவர் ரிச்சர்ட் மோரி இவ்வாறான சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரிச்சர்ட் மோரி பங்கேற்றார். கழ்ச்சியில் அவர் பேசியதாவது; உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விரும்பவில்லை. […]