இலங்கை

முறையாக இல்லத்தை ஒப்படைக்காத மஹிந்த – உரிய நடவடிக்கைக்கு தயாராகும் அரசாங்கம்

  • October 3, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் ஒப்படைக்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறி மூன்று வாரங்கள் கடந்துள்ளன. எனினும், அவர் குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தை பொது நிர்வாக அமைச்சிடம் இதுவரை ஒப்படைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்பு சலுகைகளை இரத்து செய்யும் சட்டம் […]

ஐரோப்பா செய்தி

ஸ்வீடனிலிருந்து கலிபோர்னியா வரை 5,000 மைல் பயணம் செய்து பணிபுரியும் செவிலியர்

  • October 3, 2025
  • 0 Comments

ஸ்வீடனில் இருந்து சுமார் 5,300 மைல்கள் தொலைவில் உள்ள அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு பயணம் செய்து, அங்கு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. 32 வயதான கோர்ட்னி, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் செவிலியராக பணியாற்றுகிறார். அவர் தொடர்ந்து எட்டு நாட்கள் வேலை செய்து, ஒரு மணி நேரத்திற்கு 100 டொலருக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார். அவரது வேலை திட்டம் மிகவும் தனித்துவமானது. ஒரே நேரத்தில் இரண்டு நேர […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் நீடிக்கும் முடக்கம் – ஊழியர்கள் வேலையிழக்க நேரிடும் அபாயம்

  • October 3, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் அரசாங்க முடக்கம் தொடர்கின்ற நிலையில் 2 நாட்களுக்குள் மத்திய அரசாங்க ஊழியர்களின் வேலையிழப்பு தொடங்கலாம் என வெள்ளை மாளிகை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், முடக்க நிலை எவ்வளவு நாள் நீடிக்குமென தெரியாது என துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடு முடங்கியதற்கு ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். மீண்டும் வாய்ப்புக் கிடைக்காத வகையில் பெரும்பாலோர் வேலையிலிருந்து நீக்கப்படலாம் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க […]

செய்தி விளையாட்டு

Womens WC – பாகிஸ்தானை வீழ்த்திய வங்கதேச அணி

  • October 2, 2025
  • 0 Comments

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில் இன்று இலங்கையில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற தொடரின் மூன்றாவது போட்டியில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது அதன்படி, முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவரில் 129 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. வங்கதேசம் சார்பில் ஷோமா அக்தர் 3 விக்கெட்டும், மரூபா அக்தர், நஹிதா அக்தர் ஆகியோர் தலா […]

இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் நவராத்திரி விழாவின் போது மின்சாரம் தாக்கி 9 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • October 2, 2025
  • 0 Comments

இந்தியா முழுவதும் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக துர்க்கை சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தின் லோதன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், சிலைகளை கரைப்பதற்காக சிறுவர்கள் சென்ற வாகனம் அதிக மின்னழுத்தம் கொண்ட மின் கம்பியுடன் உரசி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனத்தில் பயணித்த 9 சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து கடுமையாக காயமடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் லோதன் முதன்மை சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், […]

இலங்கை செய்தி

நாடளாவிய ரீதியில் இன்று மூடப்படும் மதுபானசாலைகள்

  • October 2, 2025
  • 0 Comments

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று வெள்ளிக்கிழமை (03) மூடப்படும் என இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி உலக மது ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. எனவே இன்று மதுபானம் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலகம் செய்தி

மொராக்கோ அரசாங்க எதிர்ப்பு போராட்டம் – மூவர் உயிரிழப்பு

  • October 2, 2025
  • 0 Comments

மொராக்கோவில் ஊழல் மற்றும் பொதுச் செலவினங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிரான போராட்டங்களின் போது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு நகரமான அகாடிருக்கு வெளியே உள்ள ஒரு சிறிய நகரமான லெக்லியாவில் பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதனால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையின் ஆயுதங்களைக் கைப்பற்றும் முயற்சியின் போது மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக மொராக்கோவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், குறித்த போராட்டத்தின் போது நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர், 1,000ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக […]

ஆசியா செய்தி முக்கிய செய்திகள்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் தலிபான் வெளியுறவு அமைச்சர்

  • October 2, 2025
  • 0 Comments

தலிபான் அரசாங்கத்தின் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி அக்டோபர் 9ம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஆகஸ்ட் 2021ல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், காபூலில் இருந்து புது தில்லிக்கு உயர்மட்ட அதிகாரிகள் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளிலிருந்து தற்காலிக விலக்கு அளிக்கப்பட்ட அமீர் கான் முத்தாகிக்கு, அக்டோபர் 9 முதல் 16 வரை புது தில்லிக்குச் செல்ல அனுமதித்ததை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்க்கு […]

செய்தி வட அமெரிக்கா

டிரம்புடன் பேரணியில் இணைந்த ராப்பர் ஒருவருக்கு கும்பல் வன்முறை குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

  • October 2, 2025
  • 0 Comments

கடந்த ஆண்டு பிரச்சார பேரணியில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் இணைந்த நியூயார்க் நகர ராப்பர் ஒருவர், புரூக்ளினில் கும்பல் வன்முறையைத் தூண்டுவதற்கு தனது இசை வாழ்க்கையின் வருவாயைப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டதால், அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் வில்லியம்ஸ் என்ற சட்டப்பூர்வ பெயர் கொண்ட ஷெஃப் ஜி, விடுவிக்கப்பட்டவுடன் மேலும் ஐந்து ஆண்டுகள் மேற்பார்வையிடப்பட்ட விடுதலையை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. “இந்த பிரதிவாதிக்கு திறமையும் வாய்ப்பும் இருந்தது, ஆனால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்குப் பதிலாக வன்முறையைத் தூண்ட […]

இலங்கை செய்தி

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கான புதிய விதிமுறைகளை அறிவித்த இலங்கை நுகர்வோர் விவகார ஆணையம்

  • October 2, 2025
  • 0 Comments

நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) வெளியிட்ட புதிய உத்தரவின் கீழ், ஏப்ரல் 1, 2026 முதல் அனைத்து மறுபயன்பாட்டு பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் ஃபீடிங் பாட்டில்கள் (பால் குடுவை) இலங்கை தரநிலைகள் (SLS) சான்றிதழைக் கொண்டிருப்பதை இலங்கை கட்டாயமாக்குகிறது. வர்த்தமானியின்படி, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் தேவையான SLS தரநிலைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் மற்றும் அதிகாரப்பூர்வ சான்றிதழ் அடையாளத்தைக் காட்டாவிட்டால், அத்தகைய பாட்டில்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், கொண்டு செல்வது, சேமித்து வைப்பது அல்லது […]