கொழும்பில் இருந்து சென்னை சென்ற ஏர் இந்தியா விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு
கொழும்பிலிருந்து இன்று(07) சென்னை நோக்கி பயணித்த ஏர் இந்தியாவின் AI274 விமானம் மீது பறவை மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பறவை மோதியதை அடுத்து விமானம் திருப்பி விடப்பட்டது. விமானத்தில் 158 பயணிகள் இருந்தனர் எனவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் உடனடியாக ஆய்வுக்காக தரையிறக்கப்பட்டது. பின்னர் பொறியாளர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளால் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஏர் இந்தியா […]













