த.வெ.க. தலைவர் விஜயின் இல்லத்திற்கு பலத்த பாதுகாப்பு!
தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில் த.வெ.க தலைவர் விஜயின் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுத.
த.வெ.க. தலைவர் விஜய் இல்லத்தின் வெளியே ஒரு துணை ஆணையர், ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் CRPF வீரர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் விஜய் இல்லத்திற்கு வர கூடிய கபாலீஸ்வரர் நுழைவாயிலில் 150-க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரசிகர்கள், தொண்டர்கள் அதிகளவில் கூடாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.





