எரிபொருள் நெருக்கடி மோசமடையும்: ஆஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை!
எரிபொருள் நெருக்கடி இன்னும் மோசமடையக்கூடும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், எரிபொருள் வரிச் சலுகையை நீட்டிப்பது குறித்த உறுதியான வாக்குறுதியை அளிக்க மறுத்துள்ளார்.
வரவிருக்கும் கூட்டாட்சி வரவுசெலவுத் திட்டத்தில் நேரடி எரிபொருள் நிவாரணத்திற்குப் பதிலாக, தலைமுறை சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் மூலதன ஆதாய வரி மற்றும் சொத்து வரி மாற்றங்களில் அரசாங்கம் கவனம் செலுத்த உள்ளது.
இந்த வரிச் சீர்திருத்தங்கள் எதிர்கால சந்ததியினருக்கு உதவும் என்று ஆளுங்கட்சி வாதிட்டாலும், இது தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை மீறும் செயல் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன.
நாட்டின் பொருளாதார எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், வீட்டுவசதி மற்றும் சேமிப்பை ஊக்குவிப்பதற்கான சிறந்த வழிமுறைகள் குறித்து அரசியல் தலைவர்களிடையே முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
ஆஸ்திரேலியாவின் வரவு- செலவுத் திட்டம் மே 11 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளது.




