ஐரோப்பா

ஹன்டா வைரஸ் பரவல் – எம்.வி. ஹோண்டியஸ் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற்றம்!

ஹன்டா வைரஸ் பரவல் குறித்து உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ள எம்.வி. ஹோண்டியஸ் கப்பலில் இருந்து பயணிகளை வெளியேற்றும் பணி இன்று (10) தொடங்கியது.

அந்த சொகுசுக் கப்பல் தற்போது ஸ்பெயினின் கேனரி தீவுகளில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வெளியேற்றம் குறித்து சுகாதார அமைச்சர் மோனிகா கார்சியா வெளியிட்ட அறிக்கையில், பயணிகளை வெளியேற்றும் பணி  சாதாரணமாக நடைபெற்று வருவதாகக் கூறினார்.

மேலும், கப்பலில் உள்ள பயணிகள் யாருக்கும் எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

23 நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 பயணிகள் கப்பலில் சிக்கியுள்ளனர். அவர்களை அவரவர் நாடுகளின் அடிப்படையில் குழுக்களாகப் பிரித்து, சிறிய படகுகள் மூலம் கரைக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், கப்பலில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். மேலும், மற்றொரு குழுவினர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்