இலங்கை செய்தி

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் சர்வஜன வாக்கெடுப்புக்கு தயார்: அரசு அறிவிப்பு

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று நிறைவு செய்துள்ளது.

அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாகச் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதனை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

“அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் (தீர்ப்பு) மூன்று வாரங்களுக்குள் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும்.

உயர்நீதிமன்றம் வழங்கும் வழிகாட்டல்களுக்கு அமையச் செயல்பட அரசாங்கம் முழுமையாகத் தயாராக உள்ளது. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய எந்தவொரு சரத்திலும் அரசாங்கம் மாற்றம் செய்யவில்லை. எனவே, சர்வஜன வாக்கெடுப்புக்கான சூழல் உருவாகாது என்றே நாங்கள் நம்புகின்றோம்.

எனினும், ஒருவேளை சர்வஜன வாக்கெடுப்பு அவசியமானது என உயர்நீதிமன்றம் கருதினால், அதனை நடத்துவதற்கும் அரசாங்கம் தயக்கமின்றித் தயாராகவே உள்ளது.”என்றார் நளிந்த ஜயதிஸ்ஸ .

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை