ஐரோப்பா

தனது ஆள்புல எல்லையில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவரும் ஜேர்மனி : புலம்பெயர்வோருக்கு சிக்கல்!

ஜேர்மனி தனது ஆள்புல எல்லையில் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் அறிவித்துள்ளது.

இடம்பெயர்வு மற்றும் ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ ஆகியவற்றின் ‘தொடர்ச்சியான சுமையை’ சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியின் சமூக ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Nancy Faeser, சரியான எல்லை கட்டுப்பாடுகளை கொண்டுவருவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் புதிய விதிமுறைகளின் கீழ் எல்லை பகுதிகளில் புலம்பெயர்ந்தோர் கடுமையான நிராகரிப்புகளை காணக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் தற்போதைய புலம்பெயர்ந்தோர் நிலைமை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து ஆழமாக வேரூன்றிய பீதியால் தூண்டப்பட்ட இந்த முடிவை ஃபைசர் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்திடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நூற்றுக்கணக்கான மனித கடத்தல்காரர்களை அவர்கள் தடுத்து நிறுத்திய போதிலும், எல்லை கட்டுப்பாடுகள் விடயத்தில் கடினமான போக்கை பின்பற்றவில்லை என பரவலாக கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில் இந்த அறிவித்தல் வந்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்