இலங்கை செய்தி

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைப் பயன்படுத்தி மோசடி

Uber signage on a vehicle in San Francisco, California, US, on Thursday, April 27, 2023. Uber Technologies Inc. is expected to release earnings figures on May 2. Photographer: David Paul Morris/Bloomberg

புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்ட இலத்திரனியல் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 7 வாகனங்கள் சுங்கத்தால் கைப்பற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உரிய அனுமதி வழங்கப்பட்ட நாளிலிருந்து ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை 119 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் 75 வாகனங்கள் அதே நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் அரசாங்கம் இழந்த வருமானம் சுமார் 35 பில்லியன் ரூபா என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்

குறைமதிப்பீடு, முறைகேடு, உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வரி செலுத்தாமை மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் பணத்தில் குறித்த வாகனங்கள் உண்மையில் இறக்குமதி செய்யப்பட்டதா என்ற நான்கு விடயங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒக்டோபர் இறுதிக்குள் அனைத்து பாக்கிகளையும் செலுத்துமாறு மதுபான நிறுவனங்களுக்கு இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை