தான்சானியாவை உலுக்கிய வெள்ளம் – 155 பேர் பலி

தான்சானியாவில் வெள்ளம் காரணமாக 155 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 236 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் சில நாட்களாக பலத்த காற்று, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
10,000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அண்டை நாடான கென்யாவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
கென்யாவில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கென்யாவில் வெள்ளத்தால் 1,350,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
(Visited 22 times, 1 visits today)