தம்புள்ள–மாத்தளை பிரதான சாலையில் கோர விபத்து!
தம்புள்ள–மாத்தளை பிரதான சாலையில், இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று (26) காலை சுமார் 9:20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தனியார் பேருந்து ஒன்று அரசுக்கு சொந்தமான பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரியவந்துள்ளது.
இதில 11 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நாலந்தா பிராந்திய மருத்துவமனை மற்றும் மாத்தளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், தனியார் பேருந்தின் ஓட்டுநர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார், அதேசமயம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நௌலா காவல்துறை மேற்கொண்டு வருகிறது.





