கடும் வெப்பம் – பிரான்ஸில் நீரில் மூழ்கி நாற்பது பேர் உயிரிழப்பு!
பிரான்ஸில் நீரில் மூழ்கி நாற்பது பேர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் இன்று அறிவித்தார்.
கடும் வெப்ப அலையில் இருந்த தப்பிக்க மக்கள் மேற்பார்வையற்ற நீர் நிலைப் பகுதிகளில் குளிக்க முற்பட்டபோது இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
பிரிட்டன், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் கடும் வெப்ப அலையால் போராடி வருகின்றன.
சில இடங்களில் படசாலைகளின் நேர அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா உலக சராசரியை விட இரண்டு மடங்குக்கு மேல் வெப்பமடைந்து வருவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய வெப்ப அலையானது, ‘ஒமேகா பிளாக்’ எனப்படும் ஒரு வானிலை அமைப்பால் இடம்பெறுவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கமைய பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வெப் பநிலை சுமார் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு பிரான்சின் சில பகுதிகளில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸ் வரை உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.





