ஈரான் போர் முடிவடைந்தாலும் எரிசக்திக்கான விலை உயர்வு தொடரும்!!
ஈரான் போர் முடிவடைந்த பின்னரும், எரிசக்தி, உணவு மற்றும் விமானப் பயணங்களுக்கான விலை உயர்வு குறைந்தது எட்டு மாதங்களுக்கு நீடிக்கும் என்று பிரித்தானிய அமைச்சரான டேரன் ஜோன்ஸ், (Darren Jones) எச்சரித்துள்ளார்.
இந்தப் பொருளாதாரத் தாக்கங்களுக்கு “மத்திய கிழக்கில் டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகளே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையே முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்படக்கூடிய பற்றாக்குறைகளைக் குறைப்பதற்கான தனது திட்டமிடலை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
பொருட்கள் இருப்பு நிலைகளைக் கண்காணிக்கவும், விநியோகச் சங்கிலித் தடைகளைச் சரிசெய்யவும் அமைச்சரவைக் குழுவும், அமைச்சர்கள் அவசரகாலக் குழுவும் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றன.





