இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : மைத்திரிக்கு சாதகமாக வந்த தீர்ப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இதனை எதிர்த்து மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று 05 நீதிபதிகள் முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், புதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு இந்தத் தீர்ப்பு தடையாக இருக்காது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்