ஒடிசாவில் 30க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர் மரணம்
Driver who saved the lives of over 30 passengers dies in Odisha
ஒடிசா(Odisha) மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (OSRTC) பேருந்தின் ஓட்டுநர் கோராபுட்-சுனாபேடா(Koraput-Sunabeda) பாதையில் வாகனம் ஒட்டிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
44 வயதான ஓட்டுநர் பி. சாய் கிருஷ்ணா, தனது மார்பில் கடுமையான வலி இருந்தபோதிலும் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி அதில் இருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்.
பேருந்து ஆந்திராவின்(Andhra Pradesh) விஜயநகரத்திலிருந்து(Vijayanagar) ஒடிசாவின் மல்காங்கிரிக்கு(Malkangiri) சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து சாய் கிருஷ்ணா SLN மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





