செம்மணி புதை குழி: நீதிகோரி ஆஸ்திரேலியாவில் போராட்டம்
இலங்கை, யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
‘தமிழீழ ஆதரவு இயக்கம்’ சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு ஈழத் தமிழர்களின் நீதிப் போராட்டத்திற்கு ஆதரவுக் குரல் எழுப்பினர்.
செம்மணி மனிதப் புதைகுழிகள் குறித்த உண்மைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வர வேண்டும்.
தமிழர்களுக்கு எதிரான படுகொலைகள் குறித்துச் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைக்குக் காரணமானவர்களைச் சர்வதேசச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
செம்மணிப் படுகொலைக்கு நீதி கோரி ஆகஸ்ட் 30 அன்று மீண்டும் ஒரு மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.





