ரஷ்யாவின் அடுத்த இலக்காக மாறும் பிரித்தானியா!
பிரித்தானியா ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளக்கூடும் என பிரித்தானியாவின் முன்னாள் இராணுவ அதிகாரி ரிச்சர்ட் கெம்ப் ( Richard Kemp) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், பிரிட்டன் ‘பாதிக்கப்படக்கூடியதாகக் கருதப்படுகிறது’ என்றும், ரஷ்யாவிடமிருந்து மறுக்கக்கூடிய நாசவேலை நடவடிக்கைகளை எதிர்பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், அதன் பாதுகாப்புக் குழுவின் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ், உக்ரைனிய ட்ரோன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய நிறுவனங்களின் பட்டியல், ரஷ்ய ஆயுதப் படைகளுக்கு ‘சாத்தியமான இலக்குகளாக காணப்படுகிறது என்று வெளிப்படையாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





