ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னி துப்பாக்கிச் சூடு: உளவுத்துறை கட்டமைப்பை மாற்றியமைக்க ஆஸ்திரேலிய பிரதமர் அதிரடி உத்தரவு

சிட்னியின் போண்டி (Bondi) கடற்கரையில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தேசிய உளவு மற்றும் பொலிஸ் முகமைகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உத்தரவிட்டுள்ளார்.

ஐஎஸ் (ISIS) சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு தந்தை மற்றும் மகனால் நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு சூழல் வேகமாக மாறிவருவதால், தீவிரவாதத்தை ஒடுக்க பாதுகாப்புப் படைகளுக்குப் கூடுதல் அதிகாரம் மற்றும் புதிய கட்டமைப்பு தேவையா என்பது குறித்து இந்த விசாரணை அமையவுள்ளது.

தாக்குதல் நடந்து சரியாக ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று ஆஸ்திரேலியா முழுவதும் தேசிய நினைவேந்தல் தினம் அனுசரிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் நினைவாக மௌன அஞ்சலி செலுத்தப்படுவதோடு, துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை மேலும் கடுமையாக்கவும் ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி