கருத்து & பகுப்பாய்வு செய்தி

AI தொழில்நுட்பத்தின் வருகையால் சிந்திக்கும் ஆற்றலை இழக்கும் மனிதர்கள்?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வருகை பல்வேறு வகையில் சமூகங்களில்  தாக்கம் செலுத்தி வருகின்ற நிலையில் தற்போது புதிய ஆய்வொன்று மனிதர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

அதாவது ஏஐ தொழில்நுட்பத்தின் துணையுடன் மனிதர்கள் தங்கள் வேலைகளை இலகுவாக முன்னெடுத்துச் செல்வதால் அவர்களின் சிந்திக்கும் ஆற்றல் குறைவடைந்து வருவதை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மாசசூசெட்ஸ் (Massachusetts) தொழில்நுட்ப நிறுவனம் (MIT) ஒரு ஆய்வை வெளியிட்டது. இது கட்டுரைகளை எழுத ChatGPT ஐப் பயன்படுத்தியவர்களின் மூளை செயற்பாடு குறைந்த அளவில் இயங்குவதை காட்டியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் கட்டுரை எழுதியவர்களைபோல இவர்களால் இயங்க முடியவில்லை என்பதை இந்த ஆய்வு அடிகோடிட்டு காட்டியுள்ளது.

“கற்றல் திறன்களில் சாத்தியமான குறைவை  தங்கள் ஆய்வு நிரூபித்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

54 பங்கேற்பாளர்களும் MIT மற்றும் அருகிலுள்ள பல்கலைக்கழகங்களிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். அவர்களின் மூளை செயல்பாடு எலக்ட்ரோஎன்செபலோகிராஃபி (EEG) ஐப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டது.

பங்கேற்பாளர்கள் பயன்படுத்திய சில அறிவுறுத்தல்களில், கட்டுரை கேள்விகளைச் சுருக்கவும், மூலங்களைக் கண்டறியவும், இலக்கணம் மற்றும் பாணியைச் செம்மைப்படுத்தவும் ஏஐயின் உதவியை நாட வேண்டும்.

சில பங்கேற்பாளர்கள் ஏஐ நினைப்பதை போன்று அவ்வளவு சிறப்பாக இயங்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி