பொழுதுபோக்கு

50 கோடி வசூலை தாண்டிய அரண்மனை?? 2024ஆம் ஆண்டின் முதல் வெற்றிப்படம்

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் கடந்த நான்கு மாதங்களாக வெளியான பல படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. படத்தை தியேட்டருக்கு வந்து பார்ப்பதை ரசிகர்கள் பெருமளவில் தவிர்த்து விட்டனர்.

அதன் காரணமாக ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளியான பிளாக்பஸ்டர் படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்து தியேட்டர்களை நடத்த வேண்டிய சூழலுக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் சினிமா அரண்மனை 4 படத்தின் மூலம் முதல் வெற்றியை ருசித்து இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கொண்டாடி வருகின்றன.

பாக் பேய் ஆரம்பத்திலேயே நடிகை தமன்னாவின் கணவர் சந்தோஷ் பிரதாப்பை கொன்றுவிட்டு தமன்னாவையும் கொன்று விடுகிறது. அந்த பேயிடம் இருந்து இறப்பதற்கு முன்பாக எப்படி குழந்தைகளை தமன்னா காப்பாற்றுகிறாரோ இறந்த பின்னர் ஆவியாக மாறிய நிலையிலும் படத்தின் பாடலில் வருவது போல கருமாரியா காத்து நிற்கும் காட்சிகள் தான் படத்தின் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான அரண்மனை 4 திரைப்படம் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து சீரான வசூலை அள்ளி தமிழ்நாட்டில் மட்டும் 40 கோடி ரூபாயும் உலக அளவில் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content