வட அமெரிக்கா

Apple நிறுவனம் ஊழியர்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடு!

Apple நிறுவனம் அதன் ஊழியர்களுக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ChatGPTயைப் பயன்படுத்தவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதே போன்றதொரு தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் Apple நிறுவனம் இருப்பதே அதற்குக் காரணம் என குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் வாயிலாக நிறுவனத்தின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துவிடும் என்ற கவலை Appleக்கு இருக்கிறது.

அதனால் Microsoft நிறுவனத்தின் Copilot செயலியையும் பயன்படுத்த வேண்டாம் என நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.மென்பொருள் குறியீட்டை உருவாக்கச் செயலி பயன்படுத்தப்படுவதாக அந்தத் தகவல் கூறுகிறது.

ChatGPTயைத் தயாரித்த OpenAI நிறுவனம் கடந்த வாரம் ‘inkognito’ அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அந்த அம்சம் இருந்தால், ChatGPTஇல் பயனீட்டாளர்கள் மேற்கொள்ளும் உரையாடல்களின் பதிவுகளைத் தரவுகளாக வைத்துக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content