உலகம்

ஒடிசாவில் மற்றுமொரு புகையிரதம் விபத்து!

கோரமண்டல் கடுகதி புகையிரதம் விபத்துக்குள்ளான ஒடிசாவின் மற்றொரு பகுதியில், மீண்டும் ஒரு சரக்கு புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு புகையிரதமொன்றின், ஐந்து பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளன.

ஒடிசா மாநிலம் பர்காஹ் மாவட்டத்தில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை வந்து பயணித்த கோரமண்டல் கடுகதி புகையிரதம், ஒடிசா மாநிலத்தின் பாலசோா், பஹாநகா் புகையிரதம் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.

தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது ஏற்றிய சரக்கு புகையிரதம் மீது, கோரமண்டல் கடுகதி புகையிரதம் மோதி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து, அதன் பெட்டிகள், சரக்கு புகையிரதம் மீதும் அருகிலிருந்த தண்டவாளங்களிலும் சிதறி கிடந்தன.

அதன்போது, அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹெளரா கடுகதி புகையிரதம் கோரமண்டல் புகையிரதம் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்தக் கோர சம்பவத்தில் 280 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது.

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!