இலங்கை செய்தி

விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் மில்லியன் கணக்கில் லாபம் ஈட்டுகின்றன

இலங்கையின் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை நிர்வகிக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் கடந்த வருடம் 27,647 மில்லியன் ரூபாவை மொத்த இலாபமாக ஈட்டியுள்ளது.

இதன் வரிக்கு பிந்திய இலாபம் 4,803 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில், விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனம் 1,983 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாக அதன் வருடாந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இது குறித்து விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் ஸ்ரீலங்கா பிரைவேட் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி குறிப்பிடுகையில்,

“மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எங்களைப் பாதிக்காது. இது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை பாதிக்கலாம் ஆனால் அது விமான நிலையத்தையும் விமான சேவையையும் பாதிக்காது.

ஏனென்றால் நாங்கள் அரசுக்குச் சொந்தமான லாபம் ஈட்டும் நிறுவனம். எமது கடந்த வருட இலாபம் 6.5 பில்லியன் ரூபாவாகும். இந்த ஆண்டு 21.5 பில்லியன் ரூபாய் லாபம் ஈட்ட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என குறிப்பிட்டுள்ளார்.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content