சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து – 21 பேர் பலி!
சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 61 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகரின் லியுயாங் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
களத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடிவிபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகில் வெடிமருந்து கிடங்குகள் இருந்ததால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக தொழிற்சாலையின் நிர்வாகிகளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.





