தமிழ்நாடு

தமிழகத்தில் 6 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்!

தமிழகத்தில் 6 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து, நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே, சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பூண்டியான். இவருடைய மகன் மணிகண்டன் என்பவர் மேட்டுபாளையத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் மகாலட்சுமி முகநூல் மூலம் அறிமுகமானார்.நண்பர்களாக இருந்த இருவரும் பின்னர் காதலிக்க துவங்கியுள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு, கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இருவரும் ஒன்றாக வாழ மணிகண்டன் வீட்டிலிருந்து மகாலட்சுமிக்கு 8 பவுன் நகை போட்டுள்ளனர். பின்னர் மகாலட்சுமி மணிகண்டனுக்கு தெரியாமல் வீட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.இதனை அடுத்து பொலிஸாரிடன் மகாலட்சுமி பற்றி மணிகண்டன் புகார் அளித்துள்ளார். பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் அவர் கைது செய்ய பட்டார்.

6 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்! பொலிஸ் விசாரணையில் தெரிந்த பகீர் பிண்ணனி

பின்னர் நடத்தப்பட்ட பொலிஸ் விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தெரிய வந்துள்ளன . மகாலட்சுமி இது போல ஏற்கனவே 4 ஆண்களை ஏமாற்றி நகைகளை திருடிக் கொண்டு ஓடியுள்ளார் என தெரிய வந்துள்ளது.மேலும் மணிகண்டனை ஏமாற்றி விட்டு சென்ற மகாலட்சுமி 6வதாக ஒருவரோடு வாழ்ந்து வந்துள்ளார். 5ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள மகாலட்சுமி 17 வயதில் திருமணம் செய்து கொண்டு, அவருக்கு இரு மகன்களும், மகள்களும் இருப்பது தெரிய வந்துள்ளது.

உடல் நலக் குறைவால் கணவர் உயிரிழக்க அவர் இது போன்ற குற்றங்களை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் காவல் துறையினர் இவ்வளவு தொடர்பாக மேலும் விசாரித்து வருகின்றனர்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content