இலங்கை செய்தி

பாக்குநீரிணையை கடந்த சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவன்

இராமேஸ்வரம் – தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு பாக்குநீரிணை ஊடாக இலங்கை சாரணர் ஒருவர் நீந்தி சென்றுள்ளார்.

SEA OF SRILANKA எனப்படும் எமது கடல் மாசுபடுவதனை தடுக்கும் விழிப்புணர்வு நோக்குடன் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் சாரணர் அணியைச் சேர்ந்த ஜனாதிபதி சாரணர் தேவேந்திரன் மதுஷிகன் பாக்குநீரிணை ஊடாக தலைமன்னாரை வந்தடைந்துள்ளார்.

படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்ற 21 வயதான இவர் அதிகாலை 2.05 க்கு ஆரம்பித்த தனது நீச்சல் பயணத்தை பிற்பகல் 2.48 அளவில் தலைமன்னாரில் நிறைவு செய்தார்.

சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தினை 12 மணித்தியாலங்கள் 53 நிமிடங்கள் 45 செக்கன்களில் கடந்துள்ளார்.

தலைமன்னாரில் மதுஷிகனை வரவேற்பதற்காக பாடசாலை சமூகத்தினர், அரசாங்க அதிகாரிகள், சாரணர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலர் கூடியிருந்தனர்.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content