யாழில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று கைது செய்யப்பட்ட்டுள்ளார்.
யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐகத் விசாந்த தலைமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்தில் குறித்த சந்தேக நபரை சுற்றி வளைத்த பொழுது 500 போதை மாத்திரை கிடைக்கபெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளத்தை சேர்ந்த 23 வயதான குறித்த சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
(Visited 10 times, 1 visits today)