சீனாவில் இரட்டை நிலநடுக்கங்கள் பதிவு
சீனாவில் இன்று காலை இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
முதலாவது நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவில் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயில் பதிவாகியதாகவும், இந்த நிலநடுக்கம் பதிவாகி 18 நிமிடங்கள் கழித்து அதே கவுண்டியில் 5.8 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகியதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நிலநடுக்கங்களும் 10 கி.மீ (6.2 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளன.
மேலும், இவை கிங்ஹாயின் தலைநகரான சின்னிங்கிலிருந்து சுமார் 244 கி.மீ தொலைவில் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




