ஐரோப்பா

அயர்லந்தில் தாக்குதலைத் தடுக்க முயன்றவருக்காக 300,000 பவுண்ட் நிதி திரட்டல்

அயர்லந்தின் டப்ளின் நகரில் பாடசாலைக்கு வெளியே நடந்த தாக்குதலைத் தடுக்க முயன்ற பொருள்-விநியோக ஓட்டுநருக்குச் சுமார் 300,000 பவுண்ட் நிதி திரட்டப்பட்டுள்ளது.

Caio Benicio மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது நபர் ஒருவர் பிள்ளைகளைத் தாக்குவதைக் கண்டார். தம்மால் இயன்ற அளவுக்கு வலுவாகத தலைக்கவசத்தால் தாக்குதல்காரனை அடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நடந்த அந்தக் கத்திக்குத்துத் தாக்குதலில் 5 வயதுச் சிறுமி கடுமையாகக் காயமுற்றார். அவர் இன்னும் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் 5 வயதுச் சிறுவனும் 6 வயதுச் சிறுமியும் காயமடைந்துள்ளார். Deliveroo உணவு விநியோகச் செயலியில் பணிபுரியும் பெனிசியோவிற்கு இணையத்தின் மூலம் நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

தாக்குதலைத் தடுக்க முயன்ற அவரையும் மற்ற பாதசாரிகளையும் அயர்லந்துப் பிரதமர் பாராட்டியுள்ளார். இரு பிள்ளைகளுக்குத் தந்தையான பெனிசியோ எந்தப் பெற்றோரும் அதைத்தான் செய்திருப்பர் என்று கூறியுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content