உலகம்

சீனாவில் கனமழை : 24 பேர் உயிரிழப்பு!! மக்களுக்கு எச்சரிக்கை!

  • May 22, 2026
  • 0 Comments

சீனாவில் கனமழை தொடங்கியதிலிருந்து குறைந்தது 24 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். கடந்த செவ்வாயன்று 12 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஹுபேய் (Hubei), ஹுனான் (Hunan)  மற்றும் குய்ஜோ (Guizhou) மாகாணங்களில் மேலும் பலர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணமான ஹுபேயில், அவசரகால மற்றும் இராணுவப் பணியாளர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்களில் சாலைகள் அழிவடைந்துள்ளதாகவும், தகவல் தொடர்பு […]

உலகம்

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரும் தீர்மானம் : வாக்கெடுப்பு இரத்து!

  • May 22, 2026
  • 0 Comments

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை, அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சித் தலைவர்கள் நேற்று இரத்து செய்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இதற்கு முன்னர் 03 முறை குடியரசுக் கட்சியினரின் ஏறக்குறைய ஒருமித்த ஆதரவுடன், வாக்கெடுப்பை தடுத்திருந்தது. அமெரிக்க அரசியலமைப்பின்படி, ஜனாதிபதி அல்ல, காங்கிரஸே போரை அறிவிக்க முடியும். இதனை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் கட்சியினரும், குடியரசு கட்சியினரும், இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தைப் பெற  வலியுறுத்தினர். ஒரு தெளிவான உத்தியை வகுக்காமல், […]

அரசியல் இலங்கை செய்தி

” வடக்கு, கிழக்கு எல்லைகளை காத்த காவலர்களே மலையக மக்கள்”

  • May 22, 2026
  • 0 Comments

“லயன் வாழ்க்கையை ஒழிக்க வேண்டும். மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்காக அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படும்.” என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். “ மலையக மக்களை நாம் தேசிய இனமாக அங்கீகரித்துள்ளோம். மலையக மக்களின் உரிமைக்காக எமது கட்சி எல்லா விதத்திலும் குரல் கொடுத்து வந்துள்ளது. மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு […]

ஆஸ்திரேலியா செய்தி

இஸ்ரேல் படைகள் கொடுமைப்படுத்தின: நாடு கடத்தப்பட்ட தன்னார்வலர்கள் குற்றச்சாட்டு!

  • May 22, 2026
  • 0 Comments

இஸ்ரேலால் காவலில் வைக்கப்பட்டிருந்த Global Sumud Flotilla குழுவைச் சேர்ந்த 11 ஆஸ்திரேலிய ஆர்வலர்கள் தற்போது துருக்கியை சென்றடைந்துள்ளனர். தனது படைகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 422 வெளிநாட்டு ஆர்வலர்களையும் நாடு கடத்திவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இவர்களில் முதல் குழுவினர் துருக்கியை வந்தடைந்துள்ளனர். இதில் 11 ஆஸ்திரேலியர்கள் உள்ளடங்கியுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் தங்களை இஸ்ரேலியப் படைகள் மிகவும் மோசமாக நடத்தியதாகவும், தாக்கியதாகவும் விடுவிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இஸ்ரேலிய அமைச்சரின் முறையற்ற நடத்தையை அந்நாட்டுப் பிரதமரே கண்டித்துள்ள நிலையில், […]

இலங்கை செய்தி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி: சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு வலியுறுத்து!

  • May 22, 2026
  • 0 Comments

இலங்கை மீண்டுமொரு பயங்கரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இதிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான அவசரகால தேசிய தீர்வுகளை வகுப்பதற்காக உடனடியாகச் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் எதிர்க்கட்சிகள் கூட்டாக அவசர கோரிக்கை விடுத்துள்ளன. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான விசேட கூட்டத்தின் பின்னரே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் […]

இலங்கை

அவதானம்: மண்சரிவு அபாய எச்சரிக்கை

  • May 22, 2026
  • 0 Comments

பலத்த மழை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 06 மாவட்டங்களுக்கு, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, நிவித்திகல மற்றும் கலவான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம்நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க மற்றும் […]

அரசியல் இலங்கை செய்தி

பிரபாகரனின் சடலம் எங்கே? 17 வருடங்களுக்கு பிறகு பொன்சேகா வெளியிட்ட பகீர் தகவல்!

  • May 22, 2026
  • 0 Comments

” பிரபாகரனின் சடலத்துக்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும். அது பற்றி பகிரங்கமாக கூறமுடியாது. அவ்வாறு கூறினால் அந்த இடத்துக்கு சென்று சிலர் நினைவேந்தல் நடத்தக்கூடும். நினைவகம் அமைக்க முற்படக்கூடும்.” இவ்வாறு இலங்கையில் இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே பொன்சேகா மேற்படி பரபரப்பு தகவலை வெளியிட்டார். “போர் தொடர்பில் நீங்கள் இன்றளவிலும் மனதுக்குள் நீங்கள் இரகசியமொன்றை மறைத்து வைத்துள்ளீர்கள். எனக்குகூட அதை பற்றி […]

இலங்கை செய்தி

பணவீக்கம் 4.7 வீதமாக அதிகரிப்பு

  • May 21, 2026
  • 0 Comments

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் படி, 2026 ஏப்ரல் மாதத்தில் நாட்டின் முதன்மைப் பணவீக்கம் 4.7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2026 மார்ச் மாதத்தில் இந்த மதிப்பு 2.4 சதவீதமாகப் பதிவாகியிருந்தது. அறிக்கையின்படி, மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப் பிரிவின் பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 1.1 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதேபோல், உணவற்ற பிரிவின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் பதிவான 3.8 சதவீதத்திலிருந்து ஏப்ரல் மாதத்தில் 7.8 சதவீதம் […]

ஐரோப்பா செய்தி

தூண்டிவிடும் காணொளி விவகாரம் – இஸ்ரேலிய தூதுவருக்கு பிரித்தானியாவும் அழைப்பு

  • May 21, 2026
  • 0 Comments

காசா நோக்கிச் சென்ற உதவிக் கப்பலில் இருந்த ஆர்வலர்களை கேலி செய்ததாக கூறப்படும் காணொளி தொடர்பாக, பிரித்தானிய வெளியுறவு அலுவலகம், இங்கிலாந்தில் உள்ள இஸ்ரேலின் மூத்த தூதுவரிடம் விளக்கம் கோரியுள்ளது சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்ட உதவிக் கப்பல் ஆர்வலர்களை கேலி செய்யும் வகையில், இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் Itamar Ben-Gvir காணொளிகளை வெளியிட்டிருந்தார். இந்த நடவடிக்கையை இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu ஏற்கனவே பொதுவாகக் கண்டித்துள்ளார். மேலும், பிரிட்டன் வெளியுறவுச் […]

உலகம்

போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவசரமில்லை!! இலக்குகளுக்கே முன்னுரிமை!

  • May 21, 2026
  • 0 Comments

06 வாரக் கால போர் நிறுத்தத்தின்போது ஈரான் தனது இராணுவத் தொழில் தளத்தை மீண்டும் கட்டமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “மறுசீரமைப்புக்காக உளவுத்துறை சமூகம் (IC) நிர்ணயித்திருந்த அனைத்து காலக்கெடுவையும் ஈரானியர்கள் மீறிவிட்டனர்,” என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தனக்கு அவசரமில்லை என்றும், போரை முடிப்பதற்கான காலக்கெடுவை விட பணி நோக்கங்களுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஈரான் மத்திய கிழக்குக்கு […]