ஆஸ்திரேலியா செய்தி

இஸ்ரேல் படைகள் கொடுமைப்படுத்தின: நாடு கடத்தப்பட்ட தன்னார்வலர்கள் குற்றச்சாட்டு!

இஸ்ரேலால் காவலில் வைக்கப்பட்டிருந்த Global Sumud Flotilla குழுவைச் சேர்ந்த 11 ஆஸ்திரேலிய ஆர்வலர்கள் தற்போது துருக்கியை சென்றடைந்துள்ளனர்.

தனது படைகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 422 வெளிநாட்டு ஆர்வலர்களையும் நாடு கடத்திவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இவர்களில் முதல் குழுவினர் துருக்கியை வந்தடைந்துள்ளனர். இதில் 11 ஆஸ்திரேலியர்கள் உள்ளடங்கியுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் தங்களை இஸ்ரேலியப் படைகள் மிகவும் மோசமாக நடத்தியதாகவும், தாக்கியதாகவும் விடுவிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இஸ்ரேலிய அமைச்சரின் முறையற்ற நடத்தையை அந்நாட்டுப் பிரதமரே கண்டித்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அதிகாரிகள் தங்கள் நாட்டு மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டாலும், பாலஸ்தீனத்தின் மீதான கடல்வழித் தடையை தொடர்ந்து அமல்படுத்துவதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.

இந்த ஆர்வலர்கள் அனைவரும் விரைவில் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!