உலகம் செய்தி

20 விமான நிலையங்களை மீளக் கட்டியெழுப்பியது ஈரான்!

  • May 27, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் சேதமடைந்த ஈரானின் Tabriz சர்வதேச விமான நிலையம் (Tabriz International Airport) மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. ஈரானின் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதன்கிழமை முதல் விமான போக்குவரத்து மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் தற்காலிக போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகு ஈரானில் இயல்பு நிலைக்குத் திரும்பிய 20 ஆவது விமான நிலையமாக இது கருதப்படுகின்றது. ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு […]

ஐரோப்பா

லண்டன் – பல்பொருள் அங்காடியில் தீவிபத்து!

  • May 27, 2026
  • 0 Comments

லண்டனில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இன்று பாரிய தீவிபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, பெரிய அளவிலான அவசரகால மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 100 தீயணைப்பு வீரர்களும் 15 தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மின்சார கோளாறினால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தினால் எ்வ்வித காயங்களும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் புகை மூட்டம் காரணமாக மக்கள் ஜன்னல்களை மூடி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை வென்றெடுக்க ‘கூட்டு அரசியல் சமர்’ முன்னெடுப்பு!

  • May 27, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எதிரணிகள் வலியுறுத்தியுள்ளன. கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே எதிரணி தலைவர்கள் ஒன்றிணைந்து இந்த வலியுறுத்தலை விடுத்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, முன்னாள் அமைச்சர்களான ஜி.எல். பீரிஸ், நிமல் சிறிபாலடி சில்வா, ராஜித சேனாரத்ன உள்ளிட்டவர்கள் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். மாகாணசபைத் தேர்தல் இவ்வருடம் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழுக்கு முதலிடம்: மீனவர்கள் விடுவிப்பு! பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

  • May 27, 2026
  • 0 Comments

“தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் எனவும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் விஜய் கோரிக்கை முன்வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் விஜய் டெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடி தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்ததற்காக […]

அரசியல் இலங்கை செய்தி

முப்படைகளை பலப்படுத்தவும்: பொன்சேகா அவசர அறைகூவல்!

  • May 27, 2026
  • 0 Comments

“பாதுகாப்பு விடயத்தில் தளர்வுகளை மேற்கொள்ளக்கூடாது. இராணுவம் வலுப்படுத்த வேண்டுமேதவிர, படை குறைப்பு செய்வது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “எமது நாடு மூன்று தடவைகள் ஆயுதக் கிளர்ச்சியை சந்தித்த நாடாகும். அதேபோல வெளியக அழுத்தங்களும் வரக்கூடும். எனவே, பாதுகாப்பு விடயத்தில் தளர்வுகளை மேற்கொள்ளக்கூடாது. முப்படைகள் பலமாக இருக்க […]

ஐரோப்பா

பிரான்ஸில் வாகனம் ஓட்டும்போது இந்த தவறை செய்தால் 35 யூரோ அபராதம்!

  • May 27, 2026
  • 0 Comments

பிரான்ஸில் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும் பொழுது இசையை ஒலிக்கச் செய்தல் அல்லது மாற்றுதல் உள்ளிட்ட வேறு ஏதேனும் செயற்பாடுகளை செய்யும்பொழுது அபராதம் விதிக்கப்படும். இந்த செயன்முறை வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. அதாவது வாகனம் ஓட்டும் போது சாரதிகள் வேறு எந்த செயற்பாடுகளை செய்தாலும் 35 யூரோ அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகை முதல் மூன்று முறை குற்றம் இழைப்பவர்களுக்கு பொருந்தும். மூன்று முறையை […]

உலகம்

முழு வளைகுடாக் கடற்கரையையும் கொலைக்களமாக மாற்றுவோம் – IRGC எச்சரிக்கை!

  • May 27, 2026
  • 0 Comments

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால் ஈரானின் முழு வளைகுடாக் கடற்கரையையும் ஒரு கொலைக்களமாக மாற்றிவிடுவோம் என்று ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி ஒருவர் அச்சுறுத்தியுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த தகவல் வந்துள்ளது. அமெரிக்கா மீண்டும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கினால், “சபஹார் முதல் மஹ்ஷஹர் வரையிலான பகுதியை ஆக்கிரமிப்பாளர்களின் கல்லறையாக ஈரான் மாற்றிவிடும்” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். “எதிரியுடன் நேருக்கு நேர் போரிடும் உந்துதலை எங்கள் போராளிகள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

சீனாவில் மனித உருவ ரோபோக்களை கண்காணிக்க டிஜிட்டல் அடையாள எண்கள் அறிமுகம்!

  • May 27, 2026
  • 0 Comments

சீனா தனது அனைத்து மனித உருவ ரோபோக்களுக்கும் அவற்றின் ஆயுட்காலம் முழுவதும் சிறப்பாகக் கண்காணிக்க தனித்துவமான டிஜிட்டல் அடையாள எண்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது. சீனா இந்தத் துறையில் விரைவான வளர்ச்சியை ஊக்குவிக்க முற்படுவதால், மனித உருவ ரோபோ தயாரிப்புகளில் உள்ள பாதுகாப்பு அபாயங்களை, குறைப்பதற்காக  இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மனித உருவ ரோபோக்களை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் தனித்துவமான அடையாள எண்களை எவ்வாறு கண்காணிப்பது என்பது குறித்த புதிய வழிகாட்டுதல்களையும் சீன அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இந்தத் தனித்துவமான […]

உலகம் செய்தி

போர்சேதத்திற்குப் பிறகு தப்ரிஸ் விமான நிலையம் மீண்டும் திறப்பு

  • May 27, 2026
  • 0 Comments

வடமேற்கு ஈரானில் அமைந்துள்ள தப்ரிஸ் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக ஈரான் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது. சமீபத்திய போரின்போது தாக்குதலுக்குள்ளான இந்த விமான நிலையம், ஈரானிய நிபுணர்களின் புனரமைப்பு பணிகளுக்குப் பிறகு புதன்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஏற்பட்ட மோதல்களால் பாதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து சேவைகள் தற்போது படிப்படியாக மீளத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மீண்டும் […]

உலகம் செய்தி

எதிரிகள் கலப்புப் போர் முறைகளை கையாளுகின்றனர் – ஈரான் உளவுத்துறை குற்றச்சாட்டு

  • May 27, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிராக செயல்படும் தரப்புகள் தற்போது “கலப்புப் போர்” (Hybrid Warfare) முறைகளை பயன்படுத்தி வருகின்றன என்று ஈரான் உளவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர்க்களத்தில் எதிரிகள் தோல்வியடைந்ததால், அவர்கள் தற்போது பொருளாதார அழுத்தம், இணையத் தாக்குதல்கள், ஆயுதக் கடத்தல், படுகொலை முயற்சிகள் மற்றும் ஊடகப் பிரச்சாரங்கள் போன்ற மாற்று தந்திரங்களை கையாளுகின்றனர் என அந்த அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், “இராணுவ ரீதியாக தோல்வியடைந்த எதிரி, இப்போது மென்போர், அறிவாற்றல் போர் மற்றும் சமூகக் குழப்பங்களை தூண்டும் […]