இலங்கை செய்தி

பாடசாலையில் கட்டாய வெள்ளைச் சேலை விதிமுறைக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்

  • April 10, 2026
  • 0 Comments

மொனராகலை அரச கல்லூரியின் பெண் ஆசிரியர்கள் வெள்ளைச் சேலை அணிந்து பாடசாலைக்கு வர வேண்டும் என்ற உத்தரவை இலங்கை ஆசிரியர் சங்கம் (சி.டி.யு) கண்டித்துள்ளது. அறிக்கைகளின்படி, இந்த நடவடிக்கை ஆசிரியர்களுக்குப் பெரும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்த ஆடை விதிமுறையை அமுல்படுத்துவதற்கு வெளி அழுத்தங்கள் ஏற்கனவே கொடுக்கப்படுகின்றன என்றும் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறினார். மேலும், இதில் உள்ள சிரமங்கள் குறித்துத் தெளிவாக எச்சரிக்கப்பட்ட போதிலும், ஆசிரியர்களை வெள்ளைச் சேலை அணியக் கட்டாயப்படுத்துவது முற்றிலும் தவறானது […]

இலங்கை செய்தி

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது

  • April 10, 2026
  • 0 Comments

மன்னார் கடற்பரப்பிற்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ன 10 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினர், இந்திய மீன்பிடி படகுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதை அவதானித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து,  வடமத்திய கடற்படை கட்டளையின் படகுகள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டன. இருப்பினும், தொடர்ந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு படகையும், அதிலிருந்த […]

செய்தி தமிழ்நாடு

விஜய் தாமதமாக வந்ததால் காரைக்குடி பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு

  • April 10, 2026
  • 0 Comments

காரைக்குடி தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, பிரச்சாரம் நடக்கும் இடத்துக்கு வந்ததால், தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காரைக்குடியில் விஜய் பேசாமல் திரும்பிச் சென்றார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் இன்று விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக பொலிஸாரின் அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது .காரைக்குடியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 4 வேட்பாளர்களுக்கும் ஆதரவாக விஜய் இன்று வாக்கு சேகரிப்பதாக இருந்தது. இதற்காக இன்று காலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக மதுரை […]

உலகம் செய்தி

லெபனானில் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு: தலைதூக்கும் மனிதாபிமான நெருக்கடி!

  • April 10, 2026
  • 0 Comments

லெபனானில் தீவிரமடைந்து வரும் மோதல்களால் ஏற்பட்டுள்ள கடுமையான மனிதாபிமான நெருக்கடி குறித்து உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் உக்கிர தாக்குதல்களால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளுக்குரிய நிதிய ஐக்கிய நாடுகள் சபை தற்போது வழங்கி வருகிறது. எனினும், இந்த உயிர் காக்கும் […]

உலகம்

ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்துவதில் நிபுணத்துவம் – உதவிக் கரம் நீட்டும் உக்ரைன்!

  • April 10, 2026
  • 0 Comments

ஈரான் வடிவமைத்த ஷாஹெட் ஆளில்லா விமானங்களை உக்ரேனியப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஈரானுடனான மோதலில் ஈடுபட்டுள்ள மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு  உக்ரைன் உதவி வருவது இதன் மூலம் பகிரங்கமாகியுள்ளது. உக்ரைன் போரில் ரஷ்யா இந்த ஆயுதங்களை பயன்படுத்திய நிலையில் அதனை உக்ரைன் வெற்றிகரமாக கையாண்டுள்ளது. இந்த நுட்பம் தற்போது மத்திய கிழக்கில் ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த கூட்டாளிகளுக்கு உதவியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி கூட்டாளிகளுக்கு உதவி வழங்கும் […]

உலகம் செய்தி

” எரிசக்தி பாதுகாப்பு” – ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் இணக்கம்!

  • April 10, 2026
  • 0 Comments

எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதற்கமைய எரிபொருள் மற்றும் எரிவாயு தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒத்துழைப்பின் அடிப்படையில் செயல்பட இரு நாட்டு தலைவர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தில் சிங்கப்பூர் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அதேபோல சிங்கப்பூருக்குத் தேவையான இயற்கை எரிவாயுவை (LNG) ஆஸ்திரேலியா பெருமளவில் வழங்கி வருகின்றது. இந்நிலையில் மேற்படி இணக்கப்பாடு எட்டப்பட்டு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் […]

இந்தியா

வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்: உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா!

  • April 10, 2026
  • 0 Comments

தமது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா Yashwant Verma , தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் கடிதம்மூலம் தெரியப்படுத்தியுள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதன்போத அவர் வீட்டில் இருக்கவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பொலிஸார் வீட்டில் தீயை […]

உலகம் செய்தி

ஹர்முஸ் நீரிணை திறப்பு: இந்திய, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்கள் ஆராய்வு!

  • April 10, 2026
  • 0 Comments

மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தடையின்றி இடம்பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என இரு நாட்டு அமைச்சர்களும் வலியுறுத்தினர். பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், எரிசக்தி பாதுகாப்பை பலப்படுத்தவும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளன. மேற்காசிய போரால்; உயிரிழந்த இந்தியர்களுக்காக ஜப்பான் அமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டார்.

ஐரோப்பா

எரிபொருள் விலையேற்றம் – அயர்லாந்தில் தொடர் போராட்டம்!

  • April 10, 2026
  • 0 Comments

அயர்லாந்தில் சரக்கு  வாகன உரிமையாளர்கள் மற்றும் விவசாய ஒப்பந்தக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம் காரணமாக எரிபொருள் விநியோகம் கடுமையான பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கிய எரிபொருள் கிடங்குகளுக்கு எதிராக மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது நான்காவது நாளாகத் தொடரும் இந்த பரவலான போராட்டம், நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகளில் கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. டப்ளின் (Dublin) தெருக்களில் கட்டுப்படுத்தப்பட்ட அணுகலுடன் தொடங்கிய போராட்டங்கள், தற்போது கோர்க் கவுன்டியில் (Co Cork) உள்ள வைட்கேட்டில் (Whitegate) […]

error: Content is protected !!