உலகம் செய்தி

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை: நீடித்த அமைதி குறித்து நம்பிக்கை

  • April 11, 2026
  • 0 Comments

அமெரிக்க துணை ஜனாதிபதி J. D. Vance மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் Mohammad Bagher Ghalibaf, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் (Shehbaz Sharif) ஐ தனித்தனியாக சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்புகள், மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதலுக்கு நீடித்த அமைதியை ஏற்படுத்த உதவும் என ஷெரீஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆறு வாரங்களாக நீடிக்கும் இந்த மோதல் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும், உலக பொருளாதாரத்திலும் எரிசக்தி சந்தைகளிலும் கடுமையான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது, பேச்சுவார்த்தைகள் […]

இலங்கை செய்தி

மேற்கு ஆசிய போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பு

  • April 11, 2026
  • 0 Comments

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் தற்காலிக போர்நிறுத்தத்தை பிரகடனப்படுத்துவது மற்றும் அது தொடர்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் குறித்து இலங்கை அரசாங்கம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. பிராந்திய பதற்றத்தைத் தணிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்க்கமான நடவடிக்கை இதுவென வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நிரந்தரமானதொரு தீர்வை எட்டுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துமாறு அனைத்துத் தரப்பினரிடமும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பிராந்தியத்திலுள்ள அனைத்து சமூகங்களினதும் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்காக அமைதிச் செயல்முறையின் முக்கியத்துவத்தை […]

இலங்கை செய்தி

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகள் 17 ஆம் திகதி அளவீடு!

  • April 11, 2026
  • 0 Comments

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, எதிர்வரும் 17 ஆம் திகதி நில அளவீடுகள் முன்னெடுக்கப்படும் என்று கடற்தொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தையிட்டி திஸ்ஸ விகாரை […]

ஐரோப்பா

ஜெர்மனியில் முடங்கிய விமான சேவை : 72000 பேர் பாதிப்பு!

  • April 11, 2026
  • 0 Comments

லுஃப்தான்சா (Lufthansa) ,மற்றும் அதன் பிராந்தியப் பிரிவான லுஃப்தான்சா சிட்டிலைன் (Lufthansa CityLine,) ஆகியவற்றின் விமானப் பணியாளர்கள், UFO தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வேலை நிறுத்த போராட்டமானது நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக சுமார் 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், சுமார் 72000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். முடங்கிய பேச்சுவார்த்தைகளால் இந்த வேலைநிறுத்தம் ஒரு “தவிர்க்க முடியாத ஒன்று என்று UFO தொழிற்சங்கம் கூறியது. அதே நேரத்தில், லுஃப்தான்சா இந்த நடவடிக்கையை […]

உலகம்

250 ஆவது ஆண்டு வெற்றிவிழாக் கொண்டாட்டம் – நினைவு சின்னத்தை பதிக்க தயாராகும் ட்ரம்ப்!

  • April 11, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் 250வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களுக்காக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தயாராகி வருகின்ற நிலையில், ஆர் டி ட்ரம்ப்” (“Arc de Trump) என அழைக்கப்படும் வெற்றிச் சின்னத்தை  பதிக்க நவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளைவு, லிங்கன் நினைவிடத்திற்கு நேர் எதிரே, ஆர்லிங்டன் நினைவுப் பாலத்தின் அடிவாரத்தில் உள்ள நினைவு வட்டத்தில் Memorial Circle) அமைக்கப்பட உள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, நினைவுச்சின்னம், 250 அடி உயரமும் தங்க உச்சியும் கொண்ட, […]

ஐரோப்பா செய்தி

அமெரிக்க ஆதரவு தாமதமானதால் சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை நிறுத்திய பிரித்தானியா

  • April 11, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் உறுதிப்படுத்தல் தாமதமானதைத் தொடர்ந்து, சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை பிரித்தானியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. முன்னர் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதனை இரத்து செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரமர் ஸ்டார்மரை வலியுறுத்தியிருந்தார். பிரித்தானிய பிரதேசத்தின் இறையாண்மையை மொரிஷியஸுக்கு வழங்கும் இந்த ஒப்பந்தத்தை தாங்கள் முழுமையாகக் கைவிடவில்லை என்றும், ஆனால் எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலவகாசம் முடிந்துவிட்டது என்றும் அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும், மே மாத நடுப்பகுதியில் […]

ஐரோப்பா செய்தி

ஆங்கிலக் கால்வாய் படகு விபத்து – ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு

  • April 11, 2026
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற போது ஏற்பட்ட படகு விபத்தில் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை, கலே அருகே உள்ள செயிண்ட் எட்டியன் ஓ மான்ட் கடற்கரை பகுதியில், இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து, சூடான் நாட்டைச் சேர்ந்த Alnur Mohamed Ali மீது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 27 வயதான அவர், படகை பிரான்சிலிருந்து […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் M1 நெடுஞ்சாலையில் கோர விபத்து – இருவர் பலி!

  • April 11, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பாலத்தின் மேல் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று சாலையை விட்டு விலகி  கீழே சென்றுகொண்டிருந்த ஒரு மினிபஸ் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து M1 நெடுஞ்சாலையில் நேற்று  இடம்பெற்றுள்ளது. இதில் இரண்டு பதின்ம வயது இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பேருந்தில் பயணித்த நால்வர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்த சாட்சிகள் அல்லது டேஷ்கேம் காணொளிப் பதிவுகளைக் கொண்ட எவரும் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு லெஸ்டர்ஷையர் (Leicestershire) காவல்துறை வேண்டுகோள் […]

இந்தியா செய்தி

திரிணமூல் அரசின் ஊழல்கள் தொடர்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்

  • April 11, 2026
  • 0 Comments

திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய, பாஜக வெள்ளை அறிக்கையை கொண்டுவரும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். மேற்கு வங்க மாநிலம் பூர்ப பர்தமானில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். வெளியிடப்படும் அறிக்கை திரிணமூல் அரசாங்கத்தின் 15 ஆண்டுகால முழு விபரத்தையும் முன்வைக்கும் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். இத்தகைய ஒவ்வொரு குற்றத்தையும் தடுக்க பாஜக ஆட்சியில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்திய […]

ஐரோப்பா செய்தி

மூளைக்காய்ச்சல் பரவல் – அடுத்த வாரம் 12,000 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்க நடவடிக்கை

  • April 11, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் மூளைக்காய்ச்சல் நோய்ப் பரவலைத் தொடர்ந்து, மெனிஞ்சைடிஸ் (meningitis) B தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன. சுமார் 12,000 பேருக்கு இந்த இரண்டாவது டோஸ் வழங்கப்பட உள்ளது என தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது. இந்த நோய்ப் பரவல் காரணமாக இருவர்பேர் உயிரிழந்ததுடன், 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்பின்னர், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக தடுப்பூசி வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கேன்டர்பரி, […]

error: Content is protected !!