ஐரோப்பா செய்தி

ஆண்ட்ரூ குறித்த சர்ச்சை – அரசியல் அழுத்தத்தால் பதறும் பிரித்தானியா

  • February 22, 2026
  • 0 Comments

பொது அலுவலகத்தில் தவறான நடத்தை குறித்த பொலிஸ் விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரைச் சுற்றிய அரசியல் அழுத்தம் இன்றும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் அவர் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் உள்ளிட்ட அரசியல் வட்டாரங்களில் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஆண்ட்ரூ தற்போது அரியணை வாரிசுரிமை வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளார். அவரை அந்த வரிசையில் இருந்து […]

ஐரோப்பா

மொஸ்கோவில் 04 விமான நிலையங்களின் செயற்பாடுகள் நிறுத்தம்!

  • February 22, 2026
  • 0 Comments

மொஸ்கோவில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து நான்கு விமான நிலையங்களின்  செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொஸ்கோவிற்கு செல்லும் வழியில் குறைந்தது ஏழு ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மேயர் செர்ஜி சோபியானின் (Sergei Sobyanin) தெரிவித்துள்ளார். இதேவேளை தெற்கு ஒடேசா (Odesa) பிராந்தியத்தில் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா தொடர் தாக்குதல்களை முன்னெடுத்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. தொடர்புடைய செய்தி ரஷ்யா இராஜதந்திரத்தை விட தாக்குதல்களில் முதலீடு செய்கிறது – உக்ரைன் ஆதங்கம்  

இலங்கை செய்தி

இனி எரிவாயுவுக்கு தட்டுப்பாடில்லை – 3900 மெட்ரிக் டொன் எரிவாயுவுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்

  • February 22, 2026
  • 0 Comments

3900 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (22) நாட்டை வந்தடைந்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இதைப் பயன்படுத்தி 300,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3900 மற்றும் 3700 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் முறையே எதிர்வரும் 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளன. எவ்வாறாயினும், இன்றைய தினமும் (22) நாட்டின் பல […]

உலகம்

காசா மறுசீரமைப்பு திட்டம் : ரஃபாவில் துருப்புக்களை நிலைநிறுத்தும் அமெரிக்கா!

  • February 22, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது காசா மறுசீரமைப்பு திட்டத்தின் விவரங்களை வெளியிட்டுள்ளார். இந்த அமைதிவாரிய திட்டத்தின் முதல் பணியாக ரஃபாவில்  அமெரிக்க ஜெனரல் தலைமையிலான சர்வதேச நிலைப்படுத்தல் படையை நிலைநிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கமைய இந்தோனேசியா 8000 துருப்புக்களை முதற்கட்டமாக அனுப்ப உறுதியளித்துள்ளது. அத்துடன் காசாவில் ஹமாஸை நிராயுதபாணியாக்குவதே இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம்  மொராக்கோ, கஜகஸ்தான், கொசோவோ மற்றும் அல்பேனியாவும் வீரர்களை அனுப்ப உறுதியளித்துள்ளதாக  அவர் கூறியுள்ளார். அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை மீண்டும் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யா இராஜதந்திரத்தை விட தாக்குதல்களில் முதலீடு செய்கிறது – உக்ரைன் ஆதங்கம்

  • February 22, 2026
  • 0 Comments

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில ஒருவர் உயிரிழந்துள்ளார். கியேவ் (Kyiv), ஒடேசா (Odesa) மற்றும் கார்கிவ் (Kharkiv) பகுதிகளில் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாஸ்கோ ஒரே இரவில் 50 பொலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் ஏவியுள்ளது. அத்துடன் 297 ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஷ்யா தொடர்ந்து இராஜதந்திரத்தை விட தாக்குதல்களில் முதலீடு செய்கிறது என உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy தெரிவித்துள்ளார்.

உலகம்

பொதுமன்னிப்பு கோரி 1500இற்கும் மேற்பட்ட கைதிகள் விண்ணப்பம்!

  • February 22, 2026
  • 0 Comments

வெனிசுலா அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சட்டமன்றம் தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளை மன்னித்து விடுவிக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததை தொடர்ந்து  அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துமாறு வெனிசுலா அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய 379 கைதிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு

இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

  • February 22, 2026
  • 0 Comments

இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 51 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி இன்று (22) இடம்பெற்றது. கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 […]

உலகம் செய்தி

சர்வதேச அங்கீகாரம் தேடும் சோமாலிலாந்து – அமெரிக்காவுக்கு கனிம வளங்களும் இராணுவ தளங்களும் வழங்க தயார் என அறிவிப்பு

  • February 22, 2026
  • 0 Comments

சோமாலியாவிலிருந்து பிரிந்து செயல்படும் சோமாலிலாந்து, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற முயற்சிக்கும் நிலையில், தனது கனிம வளங்கள் மற்றும் இராணுவ தளங்களை அமெரிக்காவிற்கு வழங்கத் தயாராக இருப்பதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலக அமைச்சர் காதர் ஹுசைன் அப்தி, AFP செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டுவோம் என்ற நம்பிக்கையும் அவர் வெளியிட்டார். 1991 ஆம் ஆண்டு சோமாலியாவிலிருந்து சுயாட்சியை அறிவித்த சோமாலிலாந்து, இதுவரை பரவலான சர்வதேச அங்கீகாரம் […]

ஐரோப்பா

UKவில் வாடகை துறையில் காணப்படும் பாகுபாடு : புறக்கணிக்கப்படும் இளைஞர்கள்!

  • February 22, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தனியார் வாடகை துறையில் காணப்படும் நியாயமற்ற பாகுபாட்டின் காரணாக பெரும்பாலான இளைஞர்கள் வீடற்ற நிலைக்கு அல்லது பாதுகாப்பற்ற வாழ்க்கை நிலைமைகளுக்கு தள்ளப்படுவதாக தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. வீடொன்றை வாடகைக்கு எடுக்க முடிந்தாலும் கூட குத்தகைதாரர்கள், வயது, தொழில், குடும்ப உத்தரவாததாரர் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அவர்களை நிராகரிப்பதாக EveryYouth கண்டறிந்துள்ளது. வாடகைதாரர்களின் உரிமைகள் சட்டம் சில குழுக்களுக்கு பாகுபாட்டிற்கு எதிராக புதிய பாதுகாப்புகளை அறிமுகப்படுத்தும் என்றாலும்,  இளம் வாடகைதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இது […]

ஐரோப்பா செய்தி

எப்ஸ்டீனைச் சந்திக்க வரிப்பணத்தில் இயங்கும் ஜெட் விமானங்களை ஆண்ட்ரூ பயன்படுத்தினாரா?

  • February 22, 2026
  • 0 Comments

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ வர்த்தக தூதுவராக பணியாற்றிய காலத்தில், ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்திக்க வரிப்பணத்தில் இயங்கும் ஜெட் விமானங்கள் அல்லது RAF தளங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பதை பொலிஸ் விசாரிக்க வேண்டும் எனமுன்னாள் பிரதமர் Gordon Brown கேட்டுக் கொண்டுள்ளார். ஆண்ட்ரூ தொடர்பில் பல சர்ச்சைக்குரிய விடயங்கள் வெளியாகின்ற போதிலும் அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றார். ஆனாலும் ஆண்ட்ரூ குறித்த அரசியல் அழுத்தம் பிரித்தானியாவில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து […]