பொழுதுபோக்கு

மீண்டும் ஒரு 2005 காலத்துக் காதல் காவியம்… திரைக்கு வருகிறது “மாயபிம்பம்”!

  • January 2, 2026
  • 0 Comments

கடந்த கால நினைவுகளையும், ஆழமான காதலையும் மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “மாயபிம்பம்”. இந்தப் படம் வரும் ஜனவரி 23 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இப்படம் 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை விவரிக்கிறது. செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் அவ்வளவாக ஆதிக்கம் செலுத்தாத அந்த காலகட்டத்தில், மனித உணர்வுகளுக்கும், காத்திருப்பிற்கும் இருந்த மதிப்பை இந்தப் படம் பிரதிபலிக்கிறது. ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி இந்தப் படம் […]

செய்தி விளையாட்டு

2026 டி20 உலக கோப்பை – தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

  • January 2, 2026
  • 0 Comments

20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐ.சி.சி டி20 உலக கோப்பை தொடர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக மார்க்கிராம் நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணி மார்க்கிராம்(Markram) போஸ்ச்(Bosch) டெவால்டு பிரேவிஸ்(Dewald Brevis) குயின்டன் டி காக்(Quinton de Kock) டோனி டி ஜோர்சி(Tony […]

இலங்கை

குற்றவாளியை கைது செய்ய இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி – திருகோணமலையில் சம்பவம்!

  • January 2, 2026
  • 0 Comments

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக, முறைப்பாட்டாளரிடம் பத்தாயிரம் ரூபா லஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீன் வியாபாரி மூலம் லஞ்சம் பெற முயன்றபோது பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முறைப்பாட்டாளரிடம் கோரப்பட்ட லஞ்சப் பணம், கிண்ணியாவின் […]

உலகம் செய்தி

தெற்கு ஏமனில் அதிகாரப் போட்டி – ஹத்ரமவுட்டில் படைகள் மோதல்

  • January 2, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவின் எல்லையை அண்மித்துள்ள ஏமனின் ஹத்ரமவுட் மாகாணத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சவூதி ஆதரவு பெற்ற ஆளுநருக்கு விசுவாசமான படைகளுக்கும், பிரிவினைவாத தெற்கு இடைக்கால கவுன்சிலுக்கு (STC) ஆதரவான படைகளுக்கும் இடையே மோதல் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியா எல்லைக்கு அருகே தங்களது படைகள் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டதாக STC குற்றம் சுமத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த ஹத்ரமவுட் மாகாண ஆளுநர் சலீம் அல்-கான்பாஷி, STC கட்டுப்பாட்டில் உள்ள இராணுவ தளங்களை மீட்கும் நடவடிக்கைகள் […]

இலங்கை

திருகோணமலையில் விபத்தில் சிக்கி இளைஞர் பலி!

  • January 2, 2026
  • 0 Comments

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள புன்னையடி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார் . இச்சம்பவம் நேற்று (01) இரவு இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் ஈச்சிலம்பற்று -முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவராவார். மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. உயிரிழந்த இளைஞனின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உலகம்

இந்த ஆண்டின் முதல் Wolf Moon!! எப்பொழுது தோன்றும் தெரியுமா?

  • January 2, 2026
  • 0 Comments

இந்த ஆண்டின் முதல் வுல்ஃப் மூன் (Wolf Moon) வரும் நான்காம் திகதி தோன்றவுள்ளது. சந்திரனும் பூமியும் வழக்கத்தை விட நெருக்கமாக இருக்கும்போது    வுல்ஃப் மூன் (Wolf Moon)   ஏற்படுகின்றன, இதனால் சந்திரன் 14 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றும். இந்த வுல்ஃப் மூன் (Wolf Moon)  ஆன்மீக ரீதியாகவும் மிகவும் பிரபல்யமானது. இதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதையும் உள்ளது. பண்டைய காலங்களில், கடுமையான குளிர் நாட்களில் , வடக்கு அரைக்கோளத்தில் […]

இலங்கை செய்தி

விமான நிலையத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

  • January 2, 2026
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சுமார் 34.19 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர்  சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பெங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் 3 கிலோ 419 கிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர் 35 வயதுடையவர்  என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் […]

இலங்கை செய்தி

“ இலங்கை அரசியலில் தேசிய தலைவர் ஒருவர் உருவாகவில்லை”

  • January 2, 2026
  • 0 Comments

இலங்கையில் அரசியல் தலைவர்கள் இருந்தாலும், தேசிய தலைவர் இல்லை என்று எல்லே குணவங்க தேரர் Elle Gunavanga Thero தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மெலும் கூறியவை வருமாறு, “ இலங்கைக்குரிய கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களை நாம் பாதுகாத்து வந்துள்ளோம். எனவே, எமது நாட்டு கலாசாரத்தில் கைவைப்பதற்கு எவரும் முற்படக்கூடாது. எமது நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும். எமக்கு அரசியல் தலைவர்கள் இருந்தாலும், தேசிய தலைவர் ஒருவர் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் கோடை காலத்திற்குள் குறையும் வட்டி விகிதம் – பிரபல நிபுணர் கணிப்பு!

  • January 2, 2026
  • 0 Comments

இங்கிலாந்து தனது வட்டி விகிதங்களை இந்த வருடத்தின் கோடை காலத்திற்குள் 2.75 சதவீதமாகக் குறைக்கக்கூடும் என்று நிதி நிபுணர் பில் பாபடகிஸ் ( Bill Papadakis)  கணித்துள்ளார். வேலையின்மை அதிகரிப்பு மற்றும் சேவைகள் பணவீக்கம் குறைந்து வருவது ஆகியவை பொருளாதாரத்தை ஆதரிக்க பணவியல் கொள்கைக் குழுவை வேகமாகச் செயல்படத் தூண்டும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இருப்பினும், இந்த கணிப்பு ஒரு விதிவிலக்கானது. காரணம் மற்ற பொருளாதார ஆய்வாளர்கள் குறைவான விகிதக் குறைப்புகளை எதிர்பார்க்கின்றனர்.  

இலங்கை செய்தி

300 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு

  • January 2, 2026
  • 0 Comments

வனாத்தவில்லுவ லெக்டோ தோட்டத்தில் அமைந்துள்ள அதிஉயர் வெப்பத் தகன உலையில் போதைப்பொருட்களை இட்டு அழிக்கும் நடவடிக்கை, இன்று (02) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இடம்பெற்றது. சுமார் 300 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் அபின் வகை போதைப்பொருட்கள் இதன்போது தீயிட்டு அழிக்கப்பட்டன. கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மட்டக்களப்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக, கடற்படையினரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டு, பின்னர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் […]