உலகம் செய்தி

மியான்மரில் மோசடி மையங்களிலிருந்து 47 நேபாளிகள் மீட்பு

  • December 10, 2025
  • 0 Comments

மியான்மரின்(Myanmar) மியாவாடி(Myawaddy) பகுதியில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த மோசடி மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 47 நேபாளிகள்(Nepalese) மீட்கப்பட்டு, தாய்லாந்து(Thai) மற்றும் மியான்மர் அதிகாரிகளின் ஆதரவுடன் காத்மாண்டுவுக்கு(Kathmandu) திருப்பி அனுப்பப்பட்டதாக பாங்காக்கில்(Bangkok) உள்ள நேபாள தூதரகம் தெரிவித்துள்ளது. 26 மாவட்டங்களைச் சேர்ந்த 45 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள், குற்றவியல் கும்பல்களுக்குப் பெயர் பெற்ற பகுதிகளான ஷ்வே கொக்கோ(Shwe Kokko) மற்றும் கே.கே. பார்க்கில்(KK Park) தொலைத்தொடர்பு மோசடி மற்றும் சூதாட்ட நடவடிக்கைகளில் பணிபுரிய கட்டாயப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். […]

உலகம் செய்தி

தெற்கு சீனாவில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் மரணம்

  • December 10, 2025
  • 0 Comments

தெற்கு சீனாவில்(China) உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் பிரதான நிலப்பகுதியில் இதுபோன்ற முதல் பெரிய சம்பவம் இதுவாகும். குவாங்டாங்(Guangdong) மாகாணத்தில் உள்ள சாண்டோவில்(Shandong) உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டதாக மாநில செய்தி நிறுவனமான சின்ஹுவா(Xinhua) தெரிவித்துள்ளது. குவாங்டாங் மாகாண அரசாங்கம் தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்க காவல்துறை, அவசரநிலை மேலாண்மை மற்றும் ஒழுங்கு அதிகாரிகளின் […]

இலங்கை

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ நன்கொடை

  • December 10, 2025
  • 0 Comments

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது. டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பலர் வாழ்வாதாரத்தை இழந்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட இலங்கை, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அவசியமான உடனடி […]

உலகம் செய்தி

தாய் சார்பில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மரியா கொரினா மச்சாடோவின் மகள்

  • December 10, 2025
  • 0 Comments

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா கொரினா மச்சாடோவின்(Maria Corina Machado) மகள் அனா கொரினா சோசா(Ana Corina Sosa), நோர்வேயின்(Norway) ஒஸ்லோவில்(Oslo) நடைபெற்ற விழாவில் தாய் சார்பில் விருதை ஏற்றுக்கொண்டுள்ளார். விழாவிற்கு சற்று முன்பு, தலைமறைவாக உள்ள வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தான் “பாதுகாப்பாக” இருப்பதாகவும், நோர்வே தலைநகருக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் ஆனால் சரியான நேரத்தில் நகர மண்டபத்தில் நடைபெறும் விழாவிற்கு வரமாட்டார் என்றும் ஒரு குரல் செய்தியை […]

இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் பெற்றோருக்கு இடையே நசுங்கி உயிரிழந்த சிசு

  • December 10, 2025
  • 0 Comments

உத்தரபிரதேசத்தின்(Uttar Pradesh) கஜ்ரௌலா(Gajraula) பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோருக்கு இடையே தற்செயலாக நசுங்கி ஒரு பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரும் குடும்ப உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். 25 வயது சதாம் அப்பாஸி(Saddam Abbasi) மற்றும் அவரது மனைவி அஸ்மா(Asma) ஆகியோருக்கு சுஃபியான்(Sufyan) என்ற குழந்தை நவம்பர் 10ம் திகதி பிறந்தது. குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, பெற்றோர் இரவில் தெரியாமல் உறங்கியதால் 26 நாள் குழந்தை அவர்களுக்கு இடையே சிக்கிக்கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து, அடுத்த நாள் காலை குழந்தை பதிலளிக்காமல் […]

ஐரோப்பா செய்தி

வேலைக்கு 40 நிமிடங்கள் முன்னதாக வந்த ஸ்பானிஷ் பெண் பணி நீக்கம்

  • December 10, 2025
  • 0 Comments

ஸ்பெயினில்(Spain) ஊழியர் ஒருவர், நிறுவனத்தின் ஒப்பந்த நேரமான காலை 7:30 மணியை கடைபிடிக்குமாறு வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பலமுறை எச்சரித்த போதிலும், 40 நிமிடங்கள் முன்னதாகவே அலுவலகத்திற்கு வந்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மெட்ரோவின் கூற்றுப்படி, 22 வயதான ஊழியர் 2023 முதல் சீக்கிரமாக வருவதை நிறுத்துமாறு அந்த ஊழியர் பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளார். அவரது முதலாளி இறுதியில் பொறுமை இழந்து கடுமையான தவறான நடத்தைக்காக அவரை பணிநீக்கம் செய்துள்ளார். மேலும், அவர் தொடர்ந்து சீக்கிரமாக வருவது அவர் அறிவுறுத்தல்களை புறக்கணிப்பதாகவும் […]

இலங்கை

பல நாட்களின் பின்னர் வழமைக்கு திரும்பிய கண்டி – நுவரெலியா வீதி

  • December 10, 2025
  • 0 Comments

மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த கண்டி – நுவரெலியா வீதி உட்பட 4 வீதிகள் பல நாட்களின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார். தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில் குறித்த வீதிகள் கனரக வாகன போக்குவரத்திற்காக திறக்கப்படுவதாக அவர் கூறினார். இதேவேளை, கட்டுகித்துல, தவலந்தென்ன, ரம்பொடை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களிலும் பாரியளவில் மண்சரிவு ஏற்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இராணுவத்தின் பொறியியல் படையணி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவை […]

ஐரோப்பா

புலம்பெயர்வோரை கட்டுப்படுத்த அழைப்பு – ஒன்றுக்கூடும் ஐரோப்பிய தலைவர்கள்!

  • December 10, 2025
  • 0 Comments

ஐரோப்பியத் தலைவர்கள் இடம்பெயர்வுக் கொள்கைகளை கடுமையாக்க இன்று அழைப்பு விடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் ஒன்றுக்கூடி இது தொடர்பில் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) முக்கிய உரை நிகழ்த்தவுள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய கவுன்சிலின் பிரதிநிதிகள்புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதை எளிதாக்குவது குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை மற்றும் கடலோர காவல்படை […]

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

  • December 10, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளிலும் ஓய்வு பெற்றிருந்த பேட் கம்மின்ஸ்(Pat Cummins) மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி: பேட் கம்மின்ஸ்(Pat Cummins), ஸ்காட் போலண்ட்(Scott Boland), அலெக்ஸ் கேரி(Alex Carey), […]

இலங்கை

இலங்கையில் 12 நாட்களாக பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு கிராமம்….

  • December 10, 2025
  • 0 Comments

அண்மையில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் டித்வா புயல் காணமாக இலங்கை முழுதும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக மத்திய மலை நாட்டின் பல பகுதிகள் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டன. அந்த வகையில் கடந்த 26 ஆம் திகதி வலப்பனை முங்வத்த கிராமத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள முங்வத்த கிராமத்தின் தற்போதைய கவலைக்குறிய செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. குறித்த பகுதியில் 12 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமல் மக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் […]

error: Content is protected !!