அரசியல் இலங்கை செய்தி

மீள்குடியேற்றம்: மஹிந்தவிடம் பாடம் கற்குமாறு நாமல் அழைப்பு!

  • December 11, 2025
  • 0 Comments

” வடக்கில் பெருமளவான மக்கள் இடைத்தங்கள் முகாம்களில் இருந்தனர். போர் முடிவடைந்த பின்னர் அவர்களை குறுகிய காலப்பகுதிக்குள் மீளக்குடியமர்த்தப்பட்டனர். மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் இதற்குரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார். “ அபாய வலயங்களில் வீடுகள் உள்ளன. அங்குள்ள மக்களை தற்காலிக இருப்பிடங்களுக்கு அனுப்ப வேண்டும். அதன்பின்னர் மாற்று காணிகள் தேடப்பட வேண்டும். வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை குறுகிய காலப்பகுதியில் மீள் குடியமர்த்துவதற்குரிய பொறிமுறை […]

உலகம் செய்தி

வெனிசுலா கடற்பகுதியில் எண்ணெய் டேங்கர் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!

  • December 11, 2025
  • 0 Comments

வெனிசுலா கடற்பகுதியில் எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்றை அமெரிக்க படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், வெனிசுலா கடற்கரையில் ஒரு பெரிய டேங்கரை கைப்பற்றியுள்ளதாகவும், உண்மையில் ஒரு நல்ல காரணத்திற்காக இது கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க கடலோர காவல்படையின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கைக்கு அமெரிக்க துருப்புக்கள் உதவியதாக மற்றுமொரு அதிகாரி கூறியுள்ளார். அண்மைக்காலமாக வெனிசுலா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் […]

உலகம்

மொராக்கோவில் (Moroccan) இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்புகள் – பலர் பலி!

  • December 11, 2025
  • 0 Comments

மொராக்கோவின் (Moroccan) ஃபெஸ் (Fez) நகரில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 04 மாடி குடியிருப்புகள் இரண்டு இவ்வாறு இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதில் சுமார் 08 குடும்பங்கள் வசித்து வந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த கட்டிடங்கள் பல ஆண்டுகளாக சேதமடைந்திருந்த  நிலையில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான  பணிகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக […]

இலங்கை

நிலச்சரிவு அபாயம் – பதுளை மாவட்டத்தில் இருந்து 238 குடும்பங்கள் வெளியேற்றம்!

  • December 11, 2025
  • 0 Comments

நிலச்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டம் முழுவதும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக  மாவட்டச் செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்தார். ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட சமூகங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார். “பதுளை மாவட்டத்தில் உள்ள பதினைந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் 14 பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.  களுகெல்லையில் 50 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 129 […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்லுமா இலங்கை?

  • December 11, 2025
  • 0 Comments

பேரிடரால் இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்லும் என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. “நாட்டில் பேரிடர் ஏற்படுவதற்கு முன்னரே டிசம்பர் மாதம் அரசாங்கம் விழும் என்றார்கள். இப்படியானவர்களின் கருத்துகள் பற்றி அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.” -என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பேரிடர் நிலையால் நாட்டு பொருளாதாரம் மீண்டும் விழும் என வெளியாகும் தகவல் பற்றி அமைச்சரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு. “ பேரிடரால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான […]

இலங்கை செய்தி

26,841 குடும்பங்கள் தொடர்ந்து இடைத்தங்கள் முகாம்களில்!

  • December 11, 2025
  • 0 Comments

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 203 பேர் காணாமல்போயுள்ளனர். 5 ஆயிரத்து 350 வீடுகள் முழமையாகவும், 86 ஆயிரத்து 245 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 26 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன. மண்சரிவு மற்றும் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியா: பயிற்சி மருத்துவர் வேலைநிறுத்தம் தவிர்க்கப்படுமா?

  • December 10, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் அடுத்த வாரம் நடைபெறவிருந்த இளம் மருத்துவர்களின் (Junior Doctors/Resident Doctors) வேலைநிறுத்தம், பிரித்தானிய அரசு மருத்துவ சங்கத்துக்கு (British Medical Association) ஒரு புது சலுகையை வழங்க முன் வந்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்படலாம் எனத் தெரிகிறது. மருத்துவர்களின் சங்கம் இந்தச் சலுகையை அதன் உறுப்பினர்களின் சம்மதத்தை வைத்தே அடுத்து வரும் நாட்களில் எந்தமுடிவையும் எடுக்கமுடியும் என்றும், உறுப்பினர்கள் இதற்கு ஆதரவளித்தால், டிசம்பர் 17ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கவிருந்த ஐந்து நாள் வேலைநிறுத்தம் இரத்துச் செய்யப்படலாம் […]

உலகம் செய்தி

வெனிசுலா ஜனாதிபதியை பதவி விலக நோபல் பரிசுக் குழு தலைவர் அழைப்பு

  • December 10, 2025
  • 0 Comments

நோர்வேயில்(Norway) நடைபெற்ற வெனிசுலா(Venezuela) நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவை(Maria Corina Machado)கௌரவிக்கும் விருது வழங்கும் விழாவில், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ(Nicolas Maduro) தனது 2024 தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்டு பதவி விலகுமாறு நோபல் பரிசுக் குழுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். “மதுரோ, தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு பதவி விலகுங்கள்” என்று தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னஸ்(Jørgen Vadne Fridnes) ஒரு உரையில் தெரிவித்துள்ளார். மேலும், “ஜனநாயகத்திற்கு அமைதியான மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைக்கவும். ஏனென்றால் அதுவே வெனிசுலா […]

உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் கொலை வழக்கில் இந்திய வம்சாவளி நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

  • December 10, 2025
  • 0 Comments

2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின்(Australia) குயின்ஸ்லாந்தில்(Queensland) உள்ள கடற்கரையில் 24 வயது பெண்ணைக் கொலை செய்த வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டோயா கார்டிங்லே(Toyah Cordingley) என்ற பெண்ணை கொன்ற வழக்கில் 41 வயது முன்னாள் செவிலியர் ராஜ்விந்தர் சிங்(Rajwinder Singh) குற்றவாளி என்று கெய்ர்ன்ஸில்(Cairns) உள்ள உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜ்விந்தர் சிங்கின் கொலைக்கான நோக்கம் தெரியாது என்றும் இது ஒரு சந்தர்ப்பவாதக் கொலை என்றும் நீதிபதி லிங்கன் க்ரோலி(Lincoln […]

உலகம் செய்தி

வெளிநாட்டு கலாச்சாரத்தை ஊக்குவித்ததாக ஆப்கானிஸ்தானில் நான்கு இளைஞர்கள் கைது

  • December 10, 2025
  • 0 Comments

“பீக்கி ப்ளைண்டர்ஸ்”(Peaky Blinders) என்ற பிரிட்டிஷ்(British) தொலைக்காட்சி தொடரால் ஈர்க்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்த நான்கு இளைஞர்களை ஆப்கானிஸ்தானில்(Afghanistan) உள்ள தாலிபான்(Taliban) தலைமையிலான அரசாங்கம் ஹெராட்டில்(Herat) தடுத்து வைத்து மறுவாழ்வு திட்டத்தில் சேர்த்துள்ளது. நிகழ்ச்சியில் காணப்பட்ட பாணியை ஒத்த ஆடைகள் அணிந்து வெளிநாட்டு கலாச்சாரத்தை ஊக்குவித்ததாக ஆண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 20 வயதுடைய அஸ்கர் ஹுசினாய்(Asghar Hussain), ஜலீல் யாகூபி(Jalil Yaqoobi), அஷோர் அக்பரி(Ashor Akbari) மற்றும் தாவுத் ராசா(Daud Raza) ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். […]

error: Content is protected !!