ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மாற்றமடையும் கோவிட் சட்டம்!

  • June 5, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் COVID-19 தனிமைப்படுத்தல் இனி கட்டாயமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது சுவாச நோய் இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தலை நிபுணர்கள் பரிந்துரைப்பதாக கூறப்படுகிறது. COVID-19, இன்ப்ளூயன்ஸா மற்றும் RSV அனைத்தும் இந்த ஆண்டு இந்த நேரத்தில் செயலில் உள்ளன, இந்த ஆண்டு இதுவரை 196,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒரு புதிய COVID-19 மாறுபாடு, NB.1.8.1, தற்போது சீனா மற்றும் ஹாங்காங்கில் பரவி வருகிறது, மேலும் WHO நிலைமையைக் கண்காணித்து வருகிறது. ஐந்து […]

ஆஸ்திரேலியா

ஜப்பானில் பெண் ஒருவரின் வீட்டிற்குள் உயிரிழந்த நிலையில் 100 பூனைகள் கண்டுபிடிப்பு

  • June 5, 2025
  • 0 Comments

தென்மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு விலங்கு நலக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் அசுத்தமான வீட்டில் சுமார் 100 உயிரிழந்த பூனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விலங்கு உதவியாளர் சென்ஜு இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளது, அந்த வீடு அதன் உறுப்பினர்களில் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறியுள்ளது. வீடு குப்பைகளால் நிறைந்ததாகவும், மலம் மற்றும் சிறுநீரால் நிரம்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உரிமையாளர் அமைப்புடன் கலந்தாலோசிக்காமல் அனுமதியின்றி பூனைகளை உள்ளே அழைத்துச் சென்றதாக குழு தெரிவித்துள்ளது. விலங்கு உதவியாளர் சென்ஜு பூனைகள் […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

12 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை

  • June 5, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்திருக்கிறார். ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், காங்கோ, ஈக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹெயிட்டி, ஈரான், லிப்யா, சோமாலியா, சுடான், யெமன் ஆகிய நாடுகளிலிருந்து வரும் மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முழுத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது X கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், “எங்களுக்கு தீங்கு செய்ய விரும்பும் நபர்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று […]

விளையாட்டு

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் நடந்தது என்ன? 11 பேர் பலி – 33 பேர் கவலைக்கிடம்

  • June 5, 2025
  • 0 Comments

18 ஆண்டுகளில் முதல்முறையாக பெங்களூரு அணியினர் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற ஆர்சிபி அணி வீரர்களை வாழ்த்த பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை காண ஆயிரக்கணக்கில் கட்டுக்கடாங்காமல் ரசிகர்கள் கூடியதால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். ஐபிஎல் தொடங்கி 18 சீசன்கள் முடிந்துவிட்டன. முதல் சீசனிலிருந்தே கோப்பைக்காக போராடி வந்த ஆர்சிபி அணியின் கனவு, 17 சீசன்களாக […]

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

  • June 5, 2025
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மேலும், ஊவா, கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வேலை செய்யாமல் ஏமாற்றும் வெளிநாட்டவர்களுக்கு உதவித்தொகை பறிபோகும் ஆபத்து

  • June 5, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் அதிமான புலம்பெயர்ந்தோர் குடிமக்கள் உதவித்தொகையை நம்பியே வாழ்க்கை நடத்துவதாக CDU கட்சியின் தலைவர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார். இது நாட்டில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் இந்த சூழ்நிலையை நீண்ட காலத்திற்கு ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கருதுகின்றார். ஜெர்மனியில் உள்ள சுமார் 40 சதவீதம் அகதிகள் மற்றும் உக்ரைனியர்கள் வேலைக்கு செல்வதில்லை. இந்நிலையில், அவர்கள் பெரும்பாலும் குடிமக்கள் உதவித்தொகையை பெறுகின்றார்கள். தங்கள் புகலிடம் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே அவர்கள் இந்த ஆதரவைப் […]

ஆசியா

ஜப்பானில் குழந்தைப் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சி

  • June 5, 2025
  • 0 Comments

ஜப்பானில் குழந்தைப் பிறப்பு விகிதம் 9ஆவது ஆண்டாக இதுவரை இல்லாத அளவு குறைந்தது. ஜப்பானின் மொத்தக் கருத்தரிப்பு விகிதம் கடந்த ஆண்டு 1.15க்குக் குறைந்தது. அதற்கு முந்திய ஆண்டு அது 1.2ஆக இருந்தது. 1947ஆம் ஆண்டுக்குப் பிறகு அது ஆகக்குறைவான விகிதமாகும். ஓராண்டுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 700,000க்குக் கீழ் பதிவானது. இளம்பெண்கள் குறைவாக இருப்பதும் தாமதமாகத் திருமணம் புரிவதும் மக்கள்தொகை குறைய முக்கியக் காரணங்கள் என்று ஜப்பானியச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. பிறப்பு விகிதத்தை உயர்த்த […]

ஐரோப்பா செய்தி

இன வெறுப்பால் பிரான்ஸ் நாட்டவரின் அதிர்ச்சி செயல் – அண்டை வீட்டார் மரணம்

  • June 5, 2025
  • 0 Comments

பிரான்ஸில் நபர் ஒருவர் அவருடைய துனீசிய அண்டை வீட்டாரைச் சுட்டுக் கொலை செய்துள்ளார். மற்றொரு துருக்கிய நாட்டவரை தாக்கியுள்ளார். அவர் அதைச் செய்வதற்கு முன் இன வெறுப்பைத் தூண்டும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். பயங்கரவாதத் தாக்குதல் என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர். தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார். சற்றுத் தொலைவில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் ஒரு காணொளியில் வெளிநாட்டினரைச் சுட்டுக் கொல்ல பிரெஞ்சு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படுமா? பிரதமர் விளக்கம்

  • June 5, 2025
  • 0 Comments

இலங்கையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை என கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் நேற்று பாராளுமன்றத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். “புலமைப்பரிசிலை தற்போது இரத்து செய்ய திட்டமில்லை. மாணவர்கள் அனுபவிக்கும் மன அழுத்தம் மற்றும் சிரமங்களை குறைக்க மட்டுமே நாங்கள் பரீட்சையில் மாற்றங்களை அறிமுகப்படுத்துவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

செய்தி விளையாட்டு

ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த RCB நிர்வாகம்

  • June 4, 2025
  • 0 Comments

ஐபிஎல் பட்டத்தை ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண பலர் மைதானம் முன் திரண்ட நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெளியே உயிரிழப்புகள் ஏற்பட்டபோதும் உள்ளே வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தியதாக ஆர்சிபி அணி மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் ஆர்சிபி அணி கூட்ட நெரிசலுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. […]