இலங்கையில் குழந்தை பெற்றுக்கொள்வதனை தவிர்க்கும் தம்பதிகள் – பிறப்பு விகிதத்தில் பாரிய வீழ்ச்சி
இலங்கையில் குழந்தை பெற்றுக்கொள்வதனை பெண்கள் தவிர்த்து வருவதாக தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் இந்த நிலைமை இந்த நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என குழந்தை மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். “2013ம் ஆண்டில் 350,000 இருந்த பிறப்புகள், 2024 ஆம் ஆண்டில் 228,000 ஆகக் குறைந்துள்ளது. அந்தக் குழந்தைகளில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். குழந்தைபருவ நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. […]













