உலகம் செய்தி

துறைமுக ஒத்துழைப்பு மற்றும் நீலப் பொருளாதாரம் குறித்து இந்தியாவுடன் இத்தாலி பேச்சுவார்த்தை

  • November 30, 2024
  • 0 Comments

கப்பல் மற்றும் படகு உற்பத்தி துறைகள் உள்ளிட்ட துறைமுக உள்கட்டமைப்புகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியாவுடன் இத்தாலி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. இந்த விவாதம் நீலப் பொருளாதாரம் மற்றும் விண்வெளி ஆய்வுகளின் பரந்த பகுதிகளை உள்ளடக்கியது என்று இத்தாலிய தொழில்துறை அமைச்சர் அடோல்போ உர்சோ தெரிவித்துள்ளார். இந்தியாவும் இத்தாலியும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்று அடோல்போ உர்சோ தெரிவித்துள்ளார். இதன் பொருள், துறைமுகங்கள், தளவாடங்கள், தரவு மற்றும் கடலுக்கடியில் […]

இந்தியா

அமெரிக்காவில் தெலுங்கானா மாணவர் வணிக வளாகத்தில் சுட்டு படுகொலை!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் வணிக வளாகம் ஒன்றில் காசாளராக பகுதிநேர பணியில் இருந்த சாய் தேஜா நுகரபு மர்ம கும்பல் ஒன்றினால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் சாய் தேஜா நுகரபு (வயது 22). கடந்த 3 மாதங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு மேல்படிப்பு படிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

செய்தி விளையாட்டு

முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி

  • November 30, 2024
  • 0 Comments

தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் கடந்த 27ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார்.அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த பவுமா 70 ரன்களிலும், கேஷவ் மகராஜ் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். […]

இலங்கை

இலங்கையில் பரவிய ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல்! நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை!

நாட்டில் பரவியுள்ள ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பண்ணையாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகக் கால்நடை போக்குவரத்து மற்றும் கால்நடை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அந்த சங்கத்தின் தலைவர் குலராஜ் பெரேரா இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா

இந்தியா – பாதயாத்திரையின் போது கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீசி தாக்குதல்

  • November 30, 2024
  • 0 Comments

டெல்லியில் பாதயாத்திரை மேற்கொண்டு இருந்த முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. டெல்லியின் தென்பகுதியில் உள்ள மால்வியா நகரில் சனிக்கிழமை (நவம்பர் 30) பிற்பகல் அச்சம்பவம் நிகழ்ந்தது. பாதயாத்திரையில் ஊடுருவிய மர்ம நபர் ஒருவர், திரவம் ஒன்றை கெஜ்ரிவால் மீது வீசியதாகவும் அந்த நபரை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிடித்துவிட்டதாகவும் காவல்துறை கூறியது. என்ன திரவம் என்றும் அவர் எதற்காகத் தாக்குதல் நடத்தினார் என்பதும் விசாரிக்கப்பட்டு வருவதாக […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் திருத்தப்பட்டுள்ள HMRC விதிகள் : டிசம்பரில் இருந்து நடைமுறைக்கு வரும் மாற்றம்!

  • November 30, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் கார் உரிமையாளர்களை பாதிக்கும் புதிய HMRC விதிகள் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மின்சார கார் பாவணையை தொடர்ந்து புதிய தொழிற்கட்சி அரசாங்கம் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்து வருகிறது. HMRC நிறுவனம் கார் ஓட்டுநர்களுக்கான புதிய ஆலோசனை எரிபொருள் கட்டணங்களை வெளியிட்டுள்ளது, இதன்படி டீசல் நிறுவன கார்களுக்கான  AFRகள் அனைத்தும் குறைந்துள்ளன. 2,000cc க்கும் அதிகமான இன்ஜின் அளவு கொண்ட டீசல் நிறுவன காரின் விகிதம் 18-17ppm இலிருந்து குறைக்கப்படுகிறது.  அதே […]

ஆசியா

தென்கொரிய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ரஷ்ய,சீன ராணுவ விமானங்கள்

  • November 30, 2024
  • 0 Comments

தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 5 சீன இராணுவ விமானங்களும், 6 ரஷ்ய இராணுவ விமானங்களும் நுழைந்ததாக அந்நாட்டு இராணுவம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை ஏவியது. இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 4 மணிநேரம் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் வட்டமடித்த 11 சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் பின்னர் பாதுகாப்பாக வெளியேறின. முன்னறிவிப்பின்றி சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் […]

இலங்கை

இலங்கை : எரிபொருட்களின் விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 2 ரூபாவினால் குறைத்து 309 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 286 ரூபாவாகும். அதேநேரம் மண்ணெய்யின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 188 […]

இலங்கை

மறு அறிவித்தல் வரை கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

  • November 30, 2024
  • 0 Comments

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புக்கு அப்பால் உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதனால் சில நேரங்களில் மிக அதிக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் […]

ஐரோப்பா

உக்ரைனின் ஆக்கிரமிக்கப்படாத பகுதிகள் “நேட்டோ குடையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – ஜெலென்ஸ்கி!

  • November 30, 2024
  • 0 Comments

உக்ரைனின் ஆக்கிரமிக்கப்படாத பகுதிகள் “நேட்டோ குடையின் கீழ்” எடுக்கப்பட்டால் உக்ரைனில் போர் முடிவுக்கு வரக்கூடும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரேனிய ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின் சில பகுதிகளுக்கு “போரின் சூடான கட்டம்” முடிவுக்கு வர நேட்டோ உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். இந்த அழைப்பிதழ் உக்ரைனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளை அங்கீகரிக்கிறது. அது நடந்தவுடன், உக்ரைனின் எஞ்சிய ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை “இராஜதந்திர வழியில்” திரும்பப் பெற முடியும் […]