ஐரோப்பா

ஜேர்மனி அரசாங்கம் பரிசீலித்து வரும் புதிய திட்டம் : 18 வயது இளைஞர்களுக்கு கிட்டும் வாய்ப்பு!

  • May 13, 2024
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்ய போர் நேட்டோ நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ எந்நேரத்திலும்  ரஷ்ய அதிபர் புட்டின் நேட்டா நாடுகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்றும் இது ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போரை  ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டிருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டின் இராணுவ பலத்தை அதிகரிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் ஜேர்மனியில் இளைஞர்களை இராணுவத்தில் சேர்க்கும் பணி விரைவில் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் […]

ஆசியா

இந்தோனேசியாவை சூழ்ந்த கருமேகங்கள் : எரிமலை வெடிப்பால் அச்சத்தில் மக்கள்!!

  • May 13, 2024
  • 0 Comments

இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணத்தில் உள்ள மவுண்ட் இபு என்ற எரிமலை வெடித்துள்ளது. இது ஐந்து நிமிடங்களுக்கு 5,000 மீட்டர் உயரத்தில் அடர்த்தியான சாம்பல் மற்றும் கருமேகங்களை உமிழ்ந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சாம்பலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க முகமூடி அணியுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கண், கை,கால்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. குறித்த பகுதியில் நிலநடுக்கங்கள் இன்னும் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே […]

ஆசியா

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை – பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி!

  • May 13, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் பணவீக்கம் ஏற்பட்டு கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்தநிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலை உயர்வை கண்டித்தும், மேல்தட்டு மக்களுக்கு வழங்கும் சலுகைகளை ரத்து செய்ய கோரியும் அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்டனர். தகவலறிந்த பொலிஸார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தை கைவிடும்படி வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் பொதுமக்கள் தாக்கியதால் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியானார். […]

செய்தி

பாரிஸில் சூட்கேசில் இனங்காணப்பட்ட சடலம் தொடர்பில் ஒருவர் கைது!

  • May 13, 2024
  • 0 Comments

பாரிஸில் உள்ள செய்ன் நதியில் சூட்கேசில் நபர் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டதை தொடர்ந்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலத்தின் அடியில் ஒரு சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் அடைக்கப்பட்டிருப்பதை தீயணைப்பு பிரிவினர் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் தற்போது 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயார் படுத்தல்கள் மும்முறமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், இவ்வாறான […]

ஆப்பிரிக்கா

நைஜீரியாவில் பரவி வரும் மர்ம நோய் : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

  • May 13, 2024
  • 0 Comments

நைஜீரியாவில் மர்மமான நோய் ஒன்று மக்களிடையே பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மர்மமான நோயால் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 177 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வயிற்று வீக்கம், அடிவயிற்றில் திரவம் குவிதல், கல்லீரல் மற்றும் மண்ணீரல், காய்ச்சல் மற்றும் ஒட்டுமொத்த பலவீனம் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் நைஜீரியாவின் மூன்று கிராமங்களில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள […]

இலங்கை

கொழும்பில் மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணியைக் கலைக்க நீர்த்தாரை பிரயோகம்

  • May 13, 2024
  • 0 Comments

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் இன்று முற்பகல் பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர். இன்று (13) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கும் தடை விதித்து நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், நாவல திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வீதி நாடகங்களை நடத்தவுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸ் […]

ஐரோப்பா

பிரித்தானியா – ஸ்கொட்லாந்தில் நீரில் விழுந்த ஜெட் விமானம் : ஒருவர் பலி!

  • May 13, 2024
  • 0 Comments

பிரித்தானியா – ஸ்காட்லாந்தில் உள்ள பிரபலமான விடுமுறை பூங்காவிற்கு அருகே ஜெட் விமானம் ஒன்று நீரில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். Kirkcudbrightshire கடற்கரையில் உள்ள கேட்ஹவுஸ் ஆஃப் ஃப்ளீட் அருகே Auchenlarie Holiday Park பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு படையனிர் மற்றைய நபரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.  

ஆசியா

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 37 பேர் பலி!

  • May 13, 2024
  • 0 Comments

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த சனிக்கிழமை பெய்த அதிகபட்ச மழையால் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்குடன் எரிமலை சாம்பல் லாவாவும் பரவியது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி பொதுமக்கள் பலர் தங்களின் உயிரையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். முக்கியமாக, கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவால் பலர் வீடுகளை இழந்தனர். சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும், […]

பொழுதுபோக்கு

குடிபோதையில் அட்டகாசம் – வேல்முருகன் அதிரடி கைது

  • May 13, 2024
  • 0 Comments

பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் குடித்துவிட்டு மதுபோதையில் மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கியதால் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். ஒரு சில ஆண்டுகள் உச்சத்தில் இருந்த வேல்முருகனுக்கு படிப்படியாக படவாய்ப்புகள் குறையத் தொடங்கியதை அடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். அந்நிகழ்ச்சி மூலம் மீண்டு புகழ் வெளிச்சம் கிடைத்ததை அடுத்து பிக்பாஸ் ஜோடிகள் என்கிற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பின்னர் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் ஜோடியாக […]

தமிழ்நாடு

எனது கைகளை சிறை கண்காணிப்பாளரே உடைத்தார் – சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

  • May 13, 2024
  • 0 Comments

யூடியூபர் சவுக்கு சங்கரை நான்காம் திகதி கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் தேனியில் வைத்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். காவல்துறையினர்களையும் பெண் காவலர்களையும் தரக்குறைவாக பேசியதாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் சிறையில் தாக்கப்பட்டதாகவும் கையில் காயம் ஏற்பட்டதாகவும் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே கடந்த வாரம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு […]

error: Content is protected !!