செய்தி

பாரிஸில் சூட்கேசில் இனங்காணப்பட்ட சடலம் தொடர்பில் ஒருவர் கைது!

பாரிஸில் உள்ள செய்ன் நதியில் சூட்கேசில் நபர் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டதை தொடர்ந்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலத்தின் அடியில் ஒரு சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் அடைக்கப்பட்டிருப்பதை தீயணைப்பு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் தற்போது 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயார் படுத்தல்கள் மும்முறமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், இவ்வாறான ஒரு கொலை சம்பவம் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மக்கள் எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி