ஐரோப்பா

சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஜோர்ஜிய நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது!

  • April 17, 2024
  • 0 Comments

வெளிநாட்டில் இருந்து 20% க்கும் அதிகமான நிதியைப் பெற்றால், ஊடகங்கள் மற்றும் வணிக சாராத நிறுவனங்கள் வெளிநாட்டு செல்வாக்கின் கீழ் இருப்பதாக பதிவு செய்ய வேண்டும் என்று முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு ஜார்ஜியாவின் பாராளுமன்றம் முதல் வாசிப்பில் வாக்களித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான ஜோர்ஜியாவின் நீண்டகால வாய்ப்புகளுக்கு இந்த திட்டம் தடையாக இருக்கும் என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். கிரெம்ளினுடன் முரண்படுவதாகக் கருதப்படும் சுயாதீன செய்தி ஊடகங்கள் மற்றும் அமைப்புகளை களங்கப்படுத்த மாஸ்கோ இதேபோன்ற சட்டத்தைப் பயன்படுத்துவதால், அவர்கள் அதை […]

இலங்கை

அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவுக்கு CID அழைப்பாணை

  • April 17, 2024
  • 0 Comments

கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் தொடர்பாடல் குழு உறுப்பினர் Fr. சிறில் காமினி பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஞானார்த்த பிரதீப்யா என்ற சிங்கள கத்தோலிக்க வார இதழின் ஆசிரியருமான அருட்தந்தை பெர்ணான்டோ , ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சில விவரங்கள் தனக்குத் தெரியும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நம்புவதால் தமக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அருட்தந்தை பெர்னாண்டோ 2021 நவம்பர் 3 முதல் 8 வரையான காலப்பகுதியிலும் சிஐடியால் […]

ஐரோப்பா

பிரான்ஸில் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றம்!

  • April 17, 2024
  • 0 Comments

பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில்,  முகாம்களில் தங்கியிருந்த 450 மக்களை பொலிஸார் வெளியேற்றியுள்ளனர். இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களுக்கு நீண்ட கால வீட்டு உதவி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு நகரம் தயாராகி வரும் நிலையில், தற்காலிக முகாம்களை அகற்ற உள்ளூர் அதிகாரிகளின் பரந்த உந்துதலின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசியா

பாகிஸ்தானில் X தளம் மீதான தடை நீடிப்பு … அரசுக்கு எதிராக கொந்தளித்த நீதிமன்றம்

  • April 17, 2024
  • 0 Comments

தேசத்தின் பாதுகாப்பு காரணங்களுக்காக, ’எக்ஸ்’ சமூக ஊடக தளத்தை பாகிஸ்தானில் முடக்கி வைத்திருப்பதாக, அந்நாட்டு உள்துறை அமைச்சகம் நீதிமன்றதல் ஒப்புக்கொண்டது. இதனையடுத்து நீதிமன்றத்தின் கண்டனத்துக்கும் அமைச்சகம் ஆளானது. அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதுமின்றி எக்ஸ் தளத்தை நாட்டில் முடக்கி வைத்திருப்பது குறித்து பாகிஸ்தான் அரசு வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கையை எடுத்ததாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம், அது தொடர்பான வழக்கு விசாரணையின் போது சிந்து உயர் நீதிமன்றத்தில் ஒப்புதல் தந்ததுள்ளது. அரசின் முறையற்ற செயல்பாடுகளுக்கு […]

இலங்கை

இலங்கை தபால் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

உள்நாட்டிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து பொதிகள் கிடைத்துள்ளதாக அறிவித்து தமது திணைக்களத்தினால் எந்தவித குறுஞ்செய்திகளும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படமாட்டாது என இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை தபால் திணைக்களத்தின் பெயரையும், உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியையும் முறையற்ற விதத்தில் பயன்படுத்தி மோசடிகள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், தமது திணைக்களத்தினால் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மூலம் ஒருபோதும் வங்கி அட்டை மற்றும் கடனட்டை தகவல்கள் கோரப்படமாட்டாது இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியா

குதிரைக்கு ஆபத்தான நோய் கண்டுபிடிப்பு… நோய் மண்டலமாக ஒரு கிராமமே அறிவிப்பு!

  • April 17, 2024
  • 0 Comments

பெங்களூருவில் குதிரைக்கு ஆபத்தான கிலாண்டர்ஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த குதிரை உள்ள டி.ஜே.ஹள்ளி கிராமம் நோய் மண்டலமாக சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூரு வடக்கு தாலுகா, டி.ஜே.ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.ஜே.ஷரீப். இவருக்குச் சொந்தமாக குதிரைகள் உள்ளன. இதில் ஒரு குதிரைக்கு ஆபத்தான கிலாண்டர்ஸ் நோய் (சுரப்பி நோய்) இன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் குதிரைகள், கழுதைகளுக்கு வருவதாகும். இந்நோய், பர்கோல்டேரியா மல்லி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் முடிச்சுகள் மற்றும் […]

பொழுதுபோக்கு

குபேரனுக்கு வந்த சிக்கல்… டோலிவுட்டில் பரபரப்பு

  • April 17, 2024
  • 0 Comments

தனது 50 வது படமான ராயனை இயக்கி, நடித்துள்ள தனுஷ், அதையடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இன்னொரு பக்கம் சேகர் கம்முலா இயக்கும் குபேரா என்ற பான் இந்தியா படத்திலும் நடித்து வருகிறார். தனுஷ் உடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. மும்பையில் உள்ள தாராவியில் நடக்கும் கதையில் இப்படம் உருவாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் குபேரா […]

இலங்கை

அமைச்சர் டக்ளஸின் சந்திப்பிற்கு செய்தி சேகரிக்க சென்ற முல்லைத்தீவு ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

  • April 17, 2024
  • 0 Comments

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் டக்ளஸ் அலுவலகத்தில் இன்றையதினம் (17.04.2024) காலை அலுவலக சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் கிராமத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கும் மக்களுக்கும் இடையில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. குறித்த சந்திப்பில் மக்கள் ,அமைச்சர் குழுவினரிடையே முரண்பாடு ஏற்பட்டிருந்தது. அதன்போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் இராசையா உதயகுமார் அதனை காணொளியாக பதிவு செய்திருந்தார். அதன்போது அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு […]

இலங்கை

இலங்கை : சாய்ந்தமருது பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை!

  • April 17, 2024
  • 0 Comments

கடந்த சில தினங்களாக திடீர் சோதனை நடவடிக்கையை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷத் காரியப்பரின் தலைமையிலான சுகாதார குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர். இதன்போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள், பாவனைக்கு பொருத்தமற்ற எண்ணெய்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள், கலப்படம் செய்யப்பட்ட சுவையூட்டிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, முறையான களஞ்சிய வசதி இல்லாத மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு […]

ஆசியா

கரடிகளை அழிக்க அனுமதி வழங்கியுள்ள ஜப்பான் அரசு…

  • April 17, 2024
  • 0 Comments

ஜப்பான் நாட்டில், அரசு மானியத்தின் உதவியுடன் வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளையும் சேர்த்துள்ளது. கரடிகளின் எண்ணிக்கை பெருகி, மனிதர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேற்கு ஜப்பானில் உள்ள ஷிகோகு பகுதியைச் சேர்ந்த கருப்பு கரடிகளைத் தவிர, பிற கரடிகள் ‘வனவிலங்கு மேலாண்மை’ பட்டியலில் சேர்க்கப்படும் என ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. கருப்பு கரடிகளின் எண்ணிக்கை பெருகவில்லை என்பதால் இந்த பட்டியலில் சேர்க்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பழுப்பு நிற கரடிகள் வடக்கு […]