ஆசியா

சீனாவின் உயர் அதிகாரி ஒருவர் வடகொரியாவிற்கு விஜயம்!

  • April 12, 2024
  • 0 Comments

சீன உயர் அதிகாரி ஒருவர் வட கொரியாவிற்கு வந்து, அவர்களின் ஒத்துழைப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வட கொரியாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின்  முக்கிய  அதிகாரியாகவும் கருதப்படும் ஜாவோ லெஜி, வடகொரியா வந்தடைதுள்ளார். அவர் நாளைய தினம் (12.04) வரை அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாவோ தனது வட கொரியப் பிரதிநிதியான Choe Ryong Hae ஐச் சந்தித்து, அரசியல், […]

இலங்கை

இலங்கையில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு!

  • April 12, 2024
  • 0 Comments

குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீண்ட நாட்களின் பின்னர் மற்றுமொரு மரணம் இன்று பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் கொவிட் வைரஸ் தொற்று காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, நோயாளி சிகிச்சை பெற்ற வோட் தொகுதியில் உள்ள நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது கோவிட் […]

ஐரோப்பா

உக்ரைன் போரில் ‘ஆபத்தான’ மாற்றத்தை ஏற்படுத்தும் ஜபோரிஜியா தாக்குதல்: ஐ.நா. அணுசக்தி கண்காணிப்புத் தலைவர் எச்சரிக்கை

உக்ரைனில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள Zaporizhzhia அணுமின் நிலையத்தின் மீதான ட்ரோன் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும், ஏனெனில் அவை போரில் “ஒரு புதிய மற்றும் மிகவும் ஆபத்தான” கட்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஐ.நா. அணுசக்தி கண்காணிப்புத் தலைவர் எச்சரித்துள்ளார். தனது ஏஜென்சியின் 35 நாடுகளைக் கொண்ட கவர்னர்கள் குழுவிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியாவை ஞாயிற்றுக்கிழமை ட்ரோன்கள் தாக்கியது, நவம்பர் 2022 க்குப் பிறகு இதுபோன்ற மோசமான சம்பவத்தில் அணு உலை […]

பொழுதுபோக்கு

பாலிவுட்டில் தயாரிப்பாளராக களமிறங்கும் ‘கே.ஜி.எஃப்’பட நாயகன் யஷ்..

  • April 12, 2024
  • 0 Comments

‘கே.ஜி.எஃப்’ பட ஹீரோ யஷ் பாலிவுட்டில் தயாரிப்பாளராகக் களமிறங்குகிறார். ரன்பீர், சாய்பல்லவி நடிக்கும் ‘ராமாயணா’ படத்தைத்தான் தயாரிக்கிறார் யஷ். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பிரபாஸ், கீர்த்தி சனோன் நடிப்பில் ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் ராமாயணம் கதை படமாக்கப்பட்டது. ஆனால், அந்தப் படத்தின் மோசமான கிராஃபிக்ஸ் மற்றும் நடிகர்கள் தேர்வால் அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. இப்படியான சூழ்நிலையில்தான் ரன்பீர், சாய்பல்லவி ராமன் – சீதையாக நடிக்க புதிய ‘ராமயணா’ படமாக்கப்பட இருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு இரண்டாம் […]

இலங்கை

நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தை !

  • April 12, 2024
  • 0 Comments

இரண்டு பிள்ளைகளின் தந்தை நீர்ப்பாசன வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய பரந்தன் பகுதியில் நீர்ப்பாசன வாய்க்காலில் இவ்வாறு குறித்த நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிசாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியை சேர்ந்த பெனடிற் பெனிஸ் நிமலன் எனும் 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

வட அமெரிக்கா

அமெரிக்கா – சிகிச்சை என்ற போர்வையில் பெண்கள்,ஆண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்த டாக்டர்!

  • April 12, 2024
  • 0 Comments

அமெரிக்காவைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சைகளை தாண்டி, பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு எதிராக 200-க்கும் மேற்பட்ட பெண்கள், பல்வேறு ஆண்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். மாசாசூசெட் மாநிலம் பாஸ்டனைச் சேர்ந்தவர் டாக்டர் டெரிக் டாட். வாத நோய்கள் மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு டாக்டரான இவர், பிரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையில் பணியாற்றினார். இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் நன்றாக […]

இலங்கை

முல்லைத்தீவில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!

  • April 12, 2024
  • 0 Comments

முல்லைத்தீவு -கைவேலி பகுதியில் வீதிக்கு அமைக்கப்பட்ட பாலத்திற்கு கீழ் தேங்கி நிற்கும் நீரில் குளித்த ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் வீதியில் அமைக்கப்பட்ட பாலத்திற்கு கீழ் சுமார் பத்து அடி பள்ளத்தில் நீர் தேங்கி இருக்கின்றது. குறித்த பாலத்தில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வழமையாக குளித்து வந்த நிலையில் நேற்றையதினம் (11.04.2024) குறித்த இடத்தில் குளித்த போது நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். இன்றையதினம் (12.04.2024) சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு […]

இலங்கை

திருகோணமலை மாவட்ட நீதிபதி மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு!

திருகோணமலை மாவட்ட நீதிபதி எம். கணேஷ்ராஜா மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட கௌரவ நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா அவர்கள் சர்வதேச மனித உரிமைகள் விருதினை பெறுவதற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து முதுகலைப் பட்டம், மூன்று முதுகலை டிப்ளோமோ, இரண்டு டிப்ளோமோ, மூன்று சர்வதேச மனித உரிமை விருதுகள் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். LLM IN INTERNATIONAL HUMAN RIGHTS LAW FROM USA LLM IN INTERNATIONAL TRADE LAW […]

உலகம்

அமெரிக்க வாகன சந்தைகளில் சீனாவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

  • April 12, 2024
  • 0 Comments

செனட் வங்கிக் குழுவின் தலைவர் ஜனாதிபதி ஜோ பைடனிடம் அமெரிக்க வாகன சந்தையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை தடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இது அமெரிக்க சட்டமியற்றுபவர் மூலம் சீனாவின் வாகன உற்பத்தியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இன்னும் வலுவான அழைப்பைக் குறிக்கிறது. சீன நிறுவனங்கள் அல்லது அவற்றின் மூலத்தை மறைக்க அவர்கள் நிறுவும் எந்த துணை நிறுவனங்களும் தயாரிக்கும் EVகளை நிரந்தரமாக தடை செய்யுமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஷெரோட் பிரவுன் […]

ஐரோப்பா

அமெரிக்க ஆதரவு இல்லாமல் உக்ரைன் வீழ்ச்சியடையும் அபாயம்: ஜப்பான் எச்சரிக்கை

அமெரிக்க ஆதரவு இல்லாமல் ரஷ்யாவின் தாக்குதலின் கீழ் உக்ரைன் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது, இது சீனாவை தைரியப்படுத்தும் மற்றும் கிழக்கு ஆசியாவில் ஒரு புதிய நெருக்கடியைத் தூண்டும் ஒரு பேரழிவு என்று ஜப்பானின் பிரதமர் ஃபுமியோ கிஷிடா எச்சரித்துள்ளார். வாஷிங்டன் டி.சி.க்கு அரசு விஜயத்தின் போது அமெரிக்க சட்டமியற்றுபவர்களிடம் இதனை அவர் தெரிவித்துள்ளார். மேலும் உலக அரங்கில் நாட்டின் பங்கு குறித்த “சுய சந்தேகத்தை” கடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.