உலக நாடுகளை தவிர்த்து இலங்கைக்காக இந்தியா எடுத்த முக்கிய தீர்மானம்
இலங்கைக்கு மட்டும், பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி 10,000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலில் அண்டை நாடு என்ற அடிப்படையிலும், புத்தாண்டு பண்டிகை காலத்தின் அடிப்படையிலும் இந்தியா அந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.













