இந்தியா

சாக்லேட் வாங்கி கொடுத்து 4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: சந்தேகநபர் கைது

4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சந்தேகநபர் மீது திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மருதிபட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரன் (43). இவரது மனைவி ஊருக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இரண்டு வார காலமாக இருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் விளையாடிய 10 வயதுள்ள சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த […]

இந்தியா

தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: அமைச்சர் ரகுபதி

” தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்” என புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, ”தமிழகத்தில் தேர்தல் களம் பிஜேபி வெர்சஸ் திமுக அல்ல. பாஜக தமிழகத்தில் இன்னும் வளரவே இல்லை வளர்ந்தது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். பண பலத்தை வைத்துக்கொண்டு கட்சி வளர்வது போன்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வைக்கின்றனர். திமுகவை எந்த கூட்டணியும் […]

ஆசியா

‘உளவியல் போர்’ : நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்

நாசர் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவை இஸ்ரேலியப் படைகள் தாக்கியுள்ளன. தொடர் மின்வெட்டு காரணமாக மருத்துவமனையில் முக்கியமான ஆக்சிஜன் விநியோகம் தடை செய்யப்பட்டதாலும் மருத்துவ வளாகத்தில் குறைந்தது நான்கு நோயாளிகள் இறந்ததாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனியர்களுக்கு காசா பகுதி முழுவதும் பாதுகாப்பான இடம் இல்லை என்பதை வலியுறுத்தும் உளவியல் போரின் தொடர்ச்சி இது என்று விமர்சிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் அகதிகள் உள்ளே சிக்கியுள்ளனர், கடுமையான தீ மற்றும் உணவு மற்றும் தண்ணீர் உட்பட […]

பொழுதுபோக்கு

கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் “அமரன்” திரைப்படத்தின் டீசர் வெளியானது….

  • February 16, 2024
  • 0 Comments

சிவகார்த்திகேயன் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ஒரு ராணுவ வீரராக களம் இறங்கியுள்ள “அமரன்” திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் மிக மிகப் பெரிய அளவிலான வரவேற்பை பெற்று வருகிறது. பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் திரைப்படம் தான் “அமரன்”. இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் “முகுந்தன்” என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு […]

ஐரோப்பா

உடல் நலக்குறைவால் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி சிறையில் உயிரிழப்பு!

  • February 16, 2024
  • 0 Comments

ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவால்னி உயிரிழந்துள்ளார். புதினை கடுமையாக விமர்சித்து வந்த நவால்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிறையில் உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அலெக்ஸ் நவால்னி உயிரிழப்புக்கான காரணம் குறித்த தகவல் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா – வெள்ளத்தில் சிக்கி இந்திய பெண்ணொருவர் உயிரிழப்பு

  • February 16, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாகாணத்தின் மவுண்ட் இஷா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், தூதரக ரீதியான உதவிகளை செய்ய அவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியா

கேரளா – சிறுமியின் விநோத பழக்கம் … வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட 2 கிலோ முடி !

  • February 16, 2024
  • 0 Comments

கேரள மாநிலத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவரின் வயிற்றிலிருந்து 2 கிலோ எடையுள்ள தலை முடியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை […]

உலகம்

பெருவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மத்திய பெருவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பெருவின் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 57 கிலோமீட்டர் (35 மைல்) ஆழத்தில் ஹுரால் நகரத்தில் மையம் கொண்டிருந்ததாக அந்த நிறுவனம் கூறியது. உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். உலகில் அதிக நிலநடுக்க இயக்கங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றான பெரு, பசிபிக் பூகம்ப மண்டலத்தில் அமைந்துள்ளது, இது “நெருப்பு வளையம்” என்றும் அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் 15, 2007 அன்று […]

இலங்கை

பியுமாவை தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி!

  • February 16, 2024
  • 0 Comments

டுபாயில் கைது செய்யப்பட்டு நேற்று (15) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் “பியுமா”வை தடுத்து வைத்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதவான் நீதிமன்றில் இது தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர். குறித்த 72 மணிநேரம் நேற்றிலிருந்து கணக்கிடப்படுகிறது. பியூமி ஹஸ்திக என்ற ‘பியுமா’ குடு சலிந்துவின் என்ற போதைப்பொருள் வியாபாரியின் முக்கிய உதவியாளராக […]

உலகம்

உலகளாவிய பாதுகாப்பு உச்சிமாநாட்டில் ஆதிக்கம் செலுத்தும் இஸ்ரேல், உக்ரைன் போர்கள்!

உலகெங்கிலும் உள்ள முன்னணி அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகள் வெள்ளிக்கிழமை முனிச்சில் ஒரு பாதுகாப்பு மாநாட்டில் கூடியுள்ளார். இந்த சந்திப்பில் இஸ்ரேல் மற்றும் உக்ரைனில் உள்ள போர்கள் மற்றும் அதன் நட்பு நாடுகளைப் பாதுகாப்பதற்கான அமெரிக்க அர்ப்பணிப்பு குறித்து ஆதிக்கம் செலுத்தும். ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், அமெரிக்கத் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திரத்தில் கவனம் செலுத்தும் வருடாந்திர உலகளாவிய கூட்டமான மியூனிக் […]

error: Content is protected !!