சாக்லேட் வாங்கி கொடுத்து 4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: சந்தேகநபர் கைது
4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சந்தேகநபர் மீது திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மருதிபட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரன் (43). இவரது மனைவி ஊருக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இரண்டு வார காலமாக இருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் விளையாடிய 10 வயதுள்ள சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த […]












