இலங்கை

அளுத்கம – முகத்தில் வெட்டு காயங்களுடன் பெண்ணொருவர் மர்மமாக உயிரிழப்பு!

  • February 18, 2024
  • 0 Comments

வெட்டுக்காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று (17) இரவு 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரகல்ல – கலவிலவத்த பகுதியைச் சேர்ந்த எஸ்.ஷிராணி லக்ஷிகா குமாரி என்ற 47 வயதுடைய பெண்ணே உயிரிழந்ததார்.உயிரிழந்த பெண் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் கிடந்ததாகவும், அவர் பேருவளை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பொலிஸாரின் விசாரணைகளின் போது, […]

இலங்கை

DAT கொடுப்பனவு தொடர்பில் நாளை நடைபெறும் முக்கிய கலந்துரையாடல்!

  • February 18, 2024
  • 0 Comments

DAT கொடுப்பனவு தொடர்பில் சுகாதார நிபுணர் சங்கங்களுக்கும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவிற்கும் இடையில் நாளை (19.02) முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலும் தோல்வியடையும் பட்சத்தில் நாளை (19) பிற்பகல் கூடி வேலைநிறுத்தம் தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களில், 72 சுகாதார தொழிற்சங்கங்கள் கடந்த சில வாரங்களில் இரண்டு தடவைகள் பல நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, தமக்கும் அதிகரிக்கப்பட்டுள்ள DAT கொடுப்பனவான […]

பொழுதுபோக்கு

நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு… மயிரிழையில் உயிர் தப்பிய ரஷ்மிகா

  • February 18, 2024
  • 0 Comments

நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா சென்ற விமானம் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதற்காக மும்பை வந்த ராஷ்மிகா, அதன் ஷூட்டிங்கிலும் பங்கேற்றார். இதையடுத்து மும்பையில் இருந்து ஐதராபாத் கிளம்பிய ராஷ்மிகா, தன்னுடைய விமான பயணம் குறித்து ஒரு பகீர் சம்பவத்தை பகிர்ந்துள்ளார். மும்பையில் இருந்து ஐதராபாத் கிளம்பிய விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் […]

தமிழ்நாடு

கோவை ராயல் கேர் இன்ஸ்ட்டியூட் ஆப் நர்சிங் கல்லூரியின் விளக்கேற்றும் விழா

  • February 18, 2024
  • 0 Comments

கோவை ராயல் கேர் இன்ஸ்ட்டியூட் ஆப் நர்சிங் கல்லூரியின் விளக்கேற்றும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. செவிலியத் துறையின் முன்னோடியான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூறும் விதமாக,செவிலியர் பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் செவிலியர் மாணவிகள்,விளக்கிளை கையில் ஏந்தி உறுதி மொழி எடுத்து கொள்வதை ஒவ்வொரு செவிலியர் கல்லூரிகளும் மரபாக பின்பற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை ராயல் கேர் இன்ஸ்ட்டியூட் ஆப் நர்சிங் கல்லூரியின் விளக்கேற்றும் விழா கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள ராமலட்சுமி […]

உலகம்

இலங்கையின் இலக்கு இதுதான் : நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்!

  • February 18, 2024
  • 0 Comments

இலங்கை அண்மைக்காலமாக எதிர்கொண்டுள்ள மிகவும் சவாலான பொருளாதாரப் பிரச்சினை கடன் மறுசீரமைப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதத்திற்குள் முழு கடன் மறுசீரமைப்பையும் நிறைவு செய்வதே இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வெளிநாட்டுக் கடன் பலதரப்பு மற்றும் இருதரப்புக் கடன் என இரு பகுதிகளைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட சியம்பலாபிட்டிய, பலதரப்புக் கடன் தொடர்ச்சியாக செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இருதரப்பு வெளிநாட்டுக் […]

ஐரோப்பா

லண்டனில் பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு ஏற்பாடு!

  • February 18, 2024
  • 0 Comments

மத்திய லண்டனில் பாலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாலஸ்தீன ஒற்றுமை இயக்கம் இந்த எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் அதில் இணைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு உடனடி போர் நிறுத்தம் தேவை என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் மேற்கு லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் சென்ற முதலாவது போராட்டம் இதுவென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தை கட்டுப்படுத்த சுமார் 1,500 […]

பொழுதுபோக்கு

சுந்தர் சி மற்றும் அனுராக் மோதும் One 2 One – மக்கள் செல்வன் குரலில் “சிங்கம் சிறுத்தை”

  • February 18, 2024
  • 0 Comments

இயக்குனர் திருஞானம் இயக்கத்தில், 24 Hours Production நிறுவனம் தயாரிப்பில், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையில் உருவாகும் புதிய திரைப்படம் One 2 One. இது சுந்தர் சி நடிப்பில் வெளியாகும் இருபதாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குனரும் நடிகருமான அனுராக் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இரு வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் மோதிக்கொள்ளும் ஒரு கதைக்களமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. ரியாஸ்கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த […]

இலங்கை

இலங்கை பொலிஸாரின் யுக்திய நடவடிக்கை : 418 சந்தேக நபர்கள் கைது!

  • February 18, 2024
  • 0 Comments

நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ், இன்று (18.02) நண்பகல் 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 418 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் 8 பேருக்கு எதிராக தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட 2 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும்   113 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கைப்பற்றப்பட்ட  […]

பொழுதுபோக்கு

பவதாரணிக்கு ஏற்பட்ட நிலை? தீனா மீது கங்கை அமரன் பகீர் குற்றச்சாட்டு

  • February 18, 2024
  • 0 Comments

தமிழ் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தீனா செயல்பட்டு வருகிறார். அவர் தலைமையில் 4 ஆண்டுகள் இந்த சங்கம் இயங்கி வந்த நிலையில், தற்போது அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இதிலும் தானே தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் எனக்கூறி இசையமைப்பாளர் தீனா தங்களிடம் கராராக கூறியதாக கங்கை அமரன் செய்தியாளர் சந்திப்பில் கூறி இருக்கிறார். அதுமட்டுமின்றி தீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் கங்கை அமரன் முன்வைத்து உள்ளார். இது இளையராஜா அமர்ந்திருக்க […]

மத்திய கிழக்கு

இலங்கைக்கு விஜயம் செய்யும் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

  • February 18, 2024
  • 0 Comments

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில், ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன்  இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளார். ஆகஸ்ட் 2023 இல், வெளியுறவு மந்திரி அலி சப்ரி, தெஹ்ரான் விஜயத்தின் போது வெளியுறவு மந்திரி டாக்டர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனுடன் இருதரப்பு விவாதங்களை நடத்தினார். […]

error: Content is protected !!