இலங்கை

DAT கொடுப்பனவு தொடர்பில் பரிசீலிக்க விசேட குழு நியமனம்!

  • February 19, 2024
  • 0 Comments

சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் முன்மொழிவுகளை பரிசீலித்து மேலதிக பணிகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவிற்கும் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று (19.02) கலந்துரையாடல் இடம்பெற்றதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கலந்துரையாடலில் சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது தொழில்சார் கோரிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்ததுடன், சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் தொடர்பிலான பிரேரணையை தயாரித்து அமைச்சிடம் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டது. இதனை […]

பொழுதுபோக்கு

பிதாமகன் விக்ரம் லுக்கில் அருண் விஜய் – வெளியானது “வணங்கான்” டீசர்

  • February 19, 2024
  • 0 Comments

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் “வணங்கான்”. சில ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவை வைத்து இந்த பட பணிகள் துவங்கிய நிலையில், ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் இருந்து விலகினார். இதனை அடுத்து இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக அருண் விஜய் களமிறங்கி நடிக்க துவங்கினார். பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், முற்றிலும் […]

இலங்கை

இலங்கையில் கோர விபத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் பலி

புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராச்சிக்கட்டுவ, மையாவ, மட்டக் கடவையில், ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் தாய், அவரது மகள் மற்றும் மற்றுமொரு சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று பிற்பகல் தனது குழந்தையையும் மற்றுமொரு குழந்தையையும் மேலதிக வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் சைக்கிள் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசியா

ஏடன் வளைகுடாவில் கப்பல் மீது தாக்குதல் : ஹூதி போராளிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

ஏடன் வளைகுடாவில் ரூபிமார் சரக்குக் கப்பலைத் தாக்கியதாகவும், கப்பல் இப்போது மூழ்கும் அபாயத்தில் இருப்பதாகவும் ஏமனில் உள்ள ஹூதி போராளிகள் தெரிவித்துள்ளனர். பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று ஹூதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் ஹூதிகள் துறைமுக நகரமான ஹொடைடாவில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தையும் சுட்டு வீழ்த்தியதாக அவர் கூறியுள்ளார். “கப்பல் கடுமையாக தாக்கப்பட்டது, இதனால் அது முற்றிலும் நிறுத்தப்பட்டது. கப்பலுக்கு ஏற்பட்ட விரிவான சேதத்தின் விளைவாக, அது இப்போது […]

ஆசியா

தென்கொரியாவில் கூட்டாக இராஜினாமா செய்யும் மருத்துவர்கள்!

  • February 19, 2024
  • 0 Comments

தென் கொரியாவில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் அரசாங்க மருத்துவக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்கள் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். நாட்டின் ஐந்து பெரிய மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற சிகிச்சைகள் தாமதமாகுவதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர் சேர்க்கையை 2,000 ஆக உயர்த்தும் அரசுத் திட்டத்தில் மருத்துவர்கள் குழுக்களும் அரசும் முட்டி மோதுகின்றன. தென் கொரியாவின் […]

ஆசியா

ரஃபா தாக்குதலுக்கான காலக்கெடுவை விதித்த இஸ்ரேல்!

ரம்ஜான் தொடக்கத்தில் காஸாவில் எஞ்சியிருக்கும் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், அடுத்த மாதம் ரஃபாவுக்கு எதிராக இஸ்ரேல் நீண்டகாலமாக அச்சுறுத்தும் தாக்குதலை நடத்தும் என்று இஸ்ரேலிய போர் அமைச்சரவை உறுப்பினர் பென்னி காண்ட்ஸ் எச்சரித்துள்ளார். “உலகம் தெரிந்து கொள்ள வேண்டும், ஹமாஸ் தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் – ரமழானுக்குள் எங்கள் பணயக்கைதிகள் வீட்டில் இல்லை என்றால், ரஃபா பகுதி உட்பட எல்லா இடங்களிலும் சண்டை தொடரும்” என்று ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி காண்ட்ஸ் அமெரிக்க யூத தலைவர்களின் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் : ஐ.நா உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

  • February 19, 2024
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றம் இன்றைய தினம் (19.02) இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி 57 வருடங்கள் நீடித்து நில ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முயற்சிக்கு முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சினை குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக ஆறு நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (19.02) முதலில் பேசும் பாலஸ்தீனிய பிரதிநிதிகள், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சர்வதேச சட்டத்தின் மூன்று முக்கிய கோட்பாடுகளை மீறியதால் அது […]

இலங்கை

கொட்டகெத்தன இரட்டைக் கொலை : குற்றவாளிக்கு மரண தண்டனை!

கொட்டகெதன பிரதேசத்தில் தாய் மற்றும் மகளை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இந்த தீர்ப்பை இன்று (19) வழங்கினார். 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி கொட்டகெத்தன பிரதேசத்தில் தாய் மற்றும் மகள் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நீல் லக்ஷ்மன் என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

இலங்கை

இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கை – இதுவரை 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

  • February 19, 2024
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நீதி நடவடிக்கையின் மூலம் இதுவரை 64,850 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுக்காக 56,140 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பட்டியலில் இருந்த 8,710 சந்தேக நபர்கள் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 56,140 சந்தேக நபர்களில், 1,850 சந்தேகநபர்கள் தடுப்பு உத்தரவுகளின் அடிப்படையில் மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 2,009 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 234 சந்தேகநபர்கள் விசாரணைக்கு […]

பொழுதுபோக்கு

இன்னும் 2 நாளில் நல்ல செய்தியோடு சந்திக்கிறேன்… கமல் கொடுத்த அப்டேட்

  • February 19, 2024
  • 0 Comments

சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள், பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் இணைந்து பணியாற்றிவரும் படம் தான் Thug Life. இந்த திரைப்படம் தற்கால கதை களத்தை கொண்ட படமாகத் தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வாழ்ந்து வந்த Thuggees என்பவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் அந்த திரைப்படத்திற்கான சில பணிகளை அமெரிக்காவில் முடித்துவிட்டு […]

error: Content is protected !!