மத்திய கிழக்கு

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் : ஐ.நா உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றம் இன்றைய தினம் (19.02) இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி 57 வருடங்கள் நீடித்து நில ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முயற்சிக்கு முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது.

இந்த பிரச்சினை குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக ஆறு நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (19.02) முதலில் பேசும் பாலஸ்தீனிய பிரதிநிதிகள், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சர்வதேச சட்டத்தின் மூன்று முக்கிய கோட்பாடுகளை மீறியதால் அது சட்டவிரோதமானது என்று வாதிடுவார்கள் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பெரும் நிலப்பரப்பை இணைத்ததன் மூலம் பிராந்திய வெற்றிக்கான தடையை மீறி, பாலஸ்தீனியர்களின் சுயநிர்ணய உரிமையை மீறி, இன பாகுபாடு மற்றும் நிறவெறி முறையை திணித்துள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.